மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க, பெண் நீதிபதிகள் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு அமைக்கப்படும் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், பொறுப்பு தலைமை நீதிபதி ஏ.முஹம்மது முஸ்டாக் மற்றும் நீதிபதி எஸ்.மனு ஆகியோர் அடங்கிய அமர்வு இக்கருத்தைத் தெரிவித்தது.