states

img

நிபாவை தொடர்ந்து குரங்கம்மை மலப்புரத்தில் பதற்றத்தை தணிக்க கேரள அரசு தீவிரம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட் ்டம் திருவாலி பகுதியைச் சேர்ந்த 24 வயதான கல்லூரி மாணவர் நிபா வைரஸ் (வவ்வால் வைரஸ் காய்ச்சல்) தொற்றால் உயிரி ழந்தார். இதனால் திருவாலி கிராம பஞ் சாயத்தின் 4, 5, 6, 7 ஆகிய வார்டுகளும், மம்பாடு கிராம பஞ்சா யத்தின் 7ஆவது வார்டும் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போல மலப்புரம் மாவட்டத்திற்கு கொரோனா காலங்களில் விடுக்கப் பட்டது போன்று பல்வேறு கட்டுப்பாடு கள் (முகக்கவசம், சமூக இடைவெளி) விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நிபாவை தொடர்ந்து மலப்புரத்தில் குரங்கம்மை அறிகுறி யுடன் இளைஞர் ஒருவர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது. எடவண்ணா பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் மஞ்சேசி மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு வைரஸ் தங்கள் மாவட்டத்தில் பரவி வருவதால் மலப் புரம் மக்கள் பதற்றத்தில் உறைந்துள்ள னர். பதற்றத்தை தணிக்க கேரள அரசு மலப்புரம் மக்களுக்கு ஆலோசனை வழங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ள தாக தகவல் வெளியாகியுள்ளது.