states

img

நிதியமைச்சர் பாலகோபாலை குறிவைத்த கேரள ஆளுநர்

அமைச்சர் கே.என்.பாலகோபால் பேசியது என்ன?

கல்வியை ஜனநாயகப்படுத்திய தால் கேரளா மிகப்பெரிய பலன்களை அடைந்துள்ளது. நான் கேரள பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு மாணவ ராக மிகச்சிறந்த அனுபவங்களை பெற்றிருக்கிறேன். பிறகு மாநிலங்களவை உறுப்பினராக செயலாற்றிய போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் செனட் உறுப்பின ராக செயலாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. மாணவர் இயக்கத் தலைவராக செயல்பட்ட நிலையில் இந்திய நாட்டின் அனைத்து பெரிய பல்கலைக்கழகங்களுக்கும் சென்று மாணவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பினையும் பெற்றிருந்தேன். இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை நினைவுகூர விரும்பு கிறேன். மேற்குவங்கத்தில் உள்ள மிட்னாப்பூரில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில், இந்திய மாணவர் சங்கத்தின் அகில  இந்தியத் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டேன். அந்த மாநாடு முடிந்தவுடனே  நான் பனாரஸ் இந்து பல்கலைக்கழ கத்திற்கு சென்றேன். எதற்காக அங்கு சென்றேன் என்பது முக்கியமானது. அந்தப் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 மாண வர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த மாணவர்களை யார் சுட்டுக்கொன்றது என்பதை நீங்கள் அறிந்தால் அதிர்ச்சி அடைவீர்கள். பல்கலைக்கழக துணை வேந்தரின் பாதுகாப்பு படையினர்தான் மாணவர்களை சுட்டுக் கொன்றார்கள். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ்  இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருக்கு 50, 60 பாதுகாப்பு வீரர்கள் இருக்கிறார்கள். அந்த மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இதுதான் நிலைமை. 

எனவே இதுபோன்ற இடங்களிலிருந்து வருகிறவர்களுக்கு கேரளாவில் உள்ள பல் கலைக்கழகங்களை புரிந்துகொள்வதே கடினமான ஒன்றாகும். கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஜனநாயகப் பூர்வமாக செயல்படுகிற நிறுவனங்களா கும். கல்வி சார்ந்த விசயங்கள் உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் இங்கே  ஜனநாயகப்பூர்வமான விவாதம் நடை பெறுகிறது. இந்த பல்கலைக்கழகங்கள் கேரள சமூகத்தில் மிகப்பெரிய அள விற்கு மாற்றங்கள் ஏற்படுவதற்கு உதவி யுள்ளன.  இத்தகைய மக்கள் கல்வி நிறு வனங்களில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகத்தை மேம்படுத்தவும் கல்வி கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் கேரளத்தின் கல்வியில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்கவும் தேவையான முயற்சிகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். நாட்டின் இதர பகுதிகளைவிட இந்த அம்சத்தில் வளர்ச்சியடைந்த மாநில மாக கேரளா பல பலன்களை அடைந் திருக்கிறது. இதற்காக நாம் நமது பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும்  கல்வி மன்றங்களை வலுப்படுத்த வேண்டும் நாட்டின் மக்கள் இந்த வளர்ச்சி யை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

விருப்பப்படி ஆளுநர் செயல்பட முடியாது: பிரசாந்த் பூஷன்

மாநில அரசின் நிர்வாக நடவடிக்கைகளில் தேவையில்லாமல் தலையிட ஆளுநர்  ஆரிப் முகமது கானுக்கு அதிகாரம் இல்லை. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டும். ஆளுநரின் ஒரே  முக்கிய அதிகாரம் என்னவென்றால், ஒரு அரசாங்கம்  பெரும்பான்மையை இழந்தால், அதன் நம்பகத் தன்மையை நிரூபிக்கும்படி கேட்கலாம். அப்போது, ஆட்சி அமைக்க யாரை அழைப்பது என்பதை அவர் முடிவு  செய்யலாம். அதையும் தாண்டி, முதல்வரின் ஆலோசனைப்படி, ஆளுநர் செயல்பட வேண்டும். நிதியமைச்சரின் மீது ஆளுநரின் விருப்பம் விலகியதால் அவரை திரும்பப் பெறுமாறு முதல்வரி டம் கோர ஆளுநருக்கு சட்டப்பூர்வ அதிகாரம்  இல்லை. ஆளுநரின் நடவடிக்கை சட்டப்பூர்வ மானது அல்ல. அதற்கு அரசமைப்பு ஆதரவும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் பல அரசியல் சாசன அமர்வுகள் ஆளுநரின் பதவி மற்றும் அதிகாரங்கள் குறித்து தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி யுள்ளன. ஆளுநர் அனுமதியின்றி தலையிடுவது கூட்டாட்சி யின் மீதான தாக்குதலாகும். இதுபோன்ற தேவையற்ற தலையீட்டை மாநில அரசு நிராகரித்து முன்னேற வேண்டும்.

திருவனந்தபுரம், அக்.28-   கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபாலை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகமதுகான் கேரள முதல்வருக்கு கடிதம் எழுதியது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. “தன்னை வெளிப்படையாக விமர்சனம் செய்த கே.என்.பால கோபால் மீதான ‘விருப்பத்தை’ திரும்பப் பெறுவதாகவும், அரச மைப்பு முறையிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.  நாட்டிலேயே எங்கும் இதுவரை கேள்விப்படாத-கோரிக்கையுடன் ஐந்து பக்க கடிதத்தை அக்டோபர் 25 செவ்வாயன்று மாலை ஆளுநர் தில்லி புறப்படும் முன்பாக அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், “பாலகோபால் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது” எனக் குறிப்பிட்டு முதல்வர் பினராயி விஜயன் ஆளுநருக்கு உடனடியாக பதிலடியும் அளித்தார். தன்னை விமர்சித்தால் அமைச்சர் களை வெளியேற்றவும் தயங்க மாட்டேன் என்று கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கேரள  ஆளுநர் முன்னறிவிப்பு செய்திருந் தார். அதைத் தொடர்ந்துதான் அது போன்ற கோரிக்கையை முன்வை த்து பாலகோபாலைக் குறிவைத்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.  இல்லாத அதிகாரத்தை பயன் படுத்தி அமைச்சரை வெளியேற்ற ஆளுநர் அளித்த கடிதம் சட்டம்  மற்றும் அரசியல் நிபுணர்களி டையே பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. கேரளப் பல்கலைக்கழகத்தின் காரியவட்டம் கல்வி வளாகத்தில் கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி செவ் வாயன்று உயர்கல்வித் துறையின் பல்வேறு திட்டங்களை முதல்வர் பின ராயி விஜயன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் கே. என்.பாலகோபால் நிகழ்த்திய உரை யின் சில வரிகளை குறிப்பிட்டுள்ளது ஆளுநரின் கடிதம். ஆங்கில, மலை யாள நாளிதழ்களின் ஐந்து நறுக்கு களும் கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் போன்ற மாநி லங்களில் இருந்து வருவோருக்கு கேரள பல்கலைக்கழகங்களின் சூழல் புரிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று, யாருடைய பெயரையும் குறிப் பிடாமல் அமைச்சர் பாலகோபால் பேசியதை, வெளியேற்றுவதற்கான காரண மாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். பால கோபால் பேச்சின் நோக்கம் ஆளுநரின் மாண்பை தகர்ப்பதும் ஆளுநர் அலு வலகத்தின் நன்மதிப்பை குறைப்பதுமாகும் என்றும்; தேசியத்தையும், தேசத்தின் மாண்பையும் சிதைப்பதுடன் ராஜதுரோக நடவடிக்கை எனவும் ஆளுநர் தனது கடிதத்தில் அடாவடியான முறையில் குறிப்பிட்டுள்ளார்.

 முதல்வர் பதிலடி

கேரள நிதியமைச்சர் கே.என்.பால கோபாலுக்கு எதிராக ஆளுநர் தெரிவித்த கருத்துகளை உடனடியாக நிராகரித்தார் முதல்வர் பினராயி விஜயன். “ஜனநாயக முன்னுதாரணங்களும் அரசமைப்பின் வழிகாட்டலும், நாட்டின் பாரம்பரியமும், அமைச்சர் கே.என்.பாலகோபாலின் வார்த்தைகள் ஆளுநரின் மகிழ்ச்சியை இழக்கச் செய்வதாக இல்லை என்பதை உணர்த்துகிறது” என ஆளுநருக்கு அளித்த பதிலில் முதல்வர் குறிப்பிட்டார். அவரது உரையில் ஒரு பிழையும் கண்டறிய முடிய வில்லை. மாநிலத்தின் நிதித்துறையை கையாளும் அமைச்சர் என்கிற நிலையில் பாலகோபாலின் மீது எனக்குள்ள நம்பிக்கை அசைக்க முடியாதது.  எனவே,  அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கை யும் தேவையில்லை என்பதை ஆளுநர் ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும்” கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரலுக்கு அடிபணியமாட்டோம்:  எம்.வி.கோவிந்தன்

இந்நிலையில்,“ ஆளுநர் ஆரிப் முகமது கானின் மிரட்டலை எதிர்கொள்ள அனைத்து வழிகளிலும் முயற்சி மேற்கொள்ளப்படும்.அமைச்சர் கே.என்.பாலகோபாலுக்கு எதிராக கொடுத்துள்ள அறிவிப்பு அர சமைப்பு முறையிலானது அல்ல; ஆளு நரின் தனிப்பட்ட விருப்பம் அல்ல அர சமைப்பு முறையின் விருப்பத்தையே பரிசீலிக்க வேண்டும்.  உச்சநீதிமன்றமே இதனை தெளிவுபடுத்தியுள்ளது.கேரளத்தில் சட்டத்தின் மூலமே பல்கலைக்கழகவேந்தர் பதவி ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இப்படி நடக்கவில்லை. இது யுஜிசி நிபந்தனையும் அல்ல” என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.