திருவனந்தபுரம், மே 21- இந்தியாவில் எந்த மாநில அரசும் கூற முடியாத சாதனைகளை பினராயி விஜயன் தலைமையிலான இரண்டாவது இடது ஜனநாயக முன்னணி அரசின் முன்னேற்ற அறிக்கை பட்டியலிட்டுள் ளது. மே 20 (சனி) நடந்த கேரள அரசின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவில், அரசின் முன்னேற்ற அறிக்கையை முதல் வர் பினராயி விஜயன், தலைமைச் செய லாளர் வி.பி.ஜாய்யிடம் வழங்கினார். மக்களுக்கான அரசாங்கத்தின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக ஒவ் வொரு ஆண்டும் முன்னேற்ற அறிக்கை யை (புராக்ரஸ் ரிப்போர்ட்) வெளியிடும் நாட்டின் முன்மாதிரி நடைமுறையை இடது ஜனநாயக முன்னணி அரசு பின்பற்றுகிறது. முன்னேற்ற அறிக்கை யில், கடந்த ஆண்டு செயல்படுத்தப் பட்ட வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களின் விவரங்கள் உட்பட 90 அத்தியாயங்க ளில் 300 பக்கங்கள் உள்ளன. நிதி ஒழுக் கத்தை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் நிதித்துறையில் சாதனை படைக் கப்பட்டுள்ளது. ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை குறைந்த செலவில் தரமானதாக வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசால் மாநில அரசுக்கு வழங்க வேண் டிய நிதி நிறுத்தப்பட்டதால் நெருக்கடி ஏற்பட்டது. என்றாலும், நல்வாழ்வுக்கான ஓய்வூதியங்களோ, விலைவாசி உயர்வோ பாதிக்கப்படவில்லை.
900-ல் 809
நெருக்கடிகள் மற்றும் ஒன்றிய அர சின் புறக்கணிப்புகளைக் கடந்து, மக்க ளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதில் இடதுசாரி அரசாங்கம் கவ னம் செலுத்தியது. வழங்கப்பட்ட 900 வாக்குறுதிகளில் இரண்டு ஆண்டுகளில் 809 நிறைவேற்றப்பட்டுள்ளன. விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உரு வாக்குதல், முதியவர்களை அரவ ணைத்து செல்வது என தீவிர கவனம் செலுத்துகிறது அரசு. உணவு மற்றும் சுகாதாரத் துறையில் ஏழை எளிய சாதா ரண மக்களைக் கருத்தில்கொள்வதன் மூலம் ஒரு விரிவான கொள்கைத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
20 லட்சம் வேலைவாய்ப்பை நோக்கி...
படித்தவர்களுக்கு டிஜிட்டல் துறை யில் 20 லட்சம் வேலைவாய்ப்பு என்ற வாக்குறுதியை அமல்படுத்தும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அறிவுப் பொருளாதாரத்தில் ஏற்கனவே 13.58 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பங்குதாரர்களுடன் இணைந்து 5.18 லட்சம் வேலைவாய்ப்பைத் திரட்ட முடிந் தது. 4,200 ஸ்டார்ட் அப்கள் மூலம் 42,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ள னர். உயிரி அறிவியல் பூங்கா, வைராலஜி நிறுவனம், புற்றுநோய் மருந்து தயாரிப்பு மையம் உள்ளிட்ட பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கே- போன் ஜூன் 5 அறிமுகம் செய்யப்பட வுள்ளது. முதல் கட்டம் ஏற்கனவே முடிந்து விட்டது. கேரளாவின் உட்கட்டமைப்பு துறையில், கண்ணைக் கவரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம், கட்டுமானம் மற்றும் சுற்றுலாத் துறை களை வளர்ச்சியை நோக்கித் தூண்டு கிறது.