states

img

அறிவியல் விழிப்புணர்வை உருவாக்குவதும் அரசமைப்பின் அடிப்படைக் கடமை

திருவனந்தபுரம், நவ.27- அறிவியல் விழிப்புணர்வை உருவாக்குவது அரசமைப்பின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். ஆனால் அதற்கு நேர்மாறாக, நமது பன்மைத்துவத்தை அழித்து, எதிர்கால சந்ததியினரின் மனதில் பிற்போக்குத்தனமான சிந்தனைகளை விதைக்க பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தை மாற்றும் அபாயகரமான செயல் நடந்து கொண்டிருக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்தார்.   நாட்டில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டாட்சி மதிப்புகள் பெரும் சவாலை எதிர் கொண்டு வருவதாகவும் கேரள முதல்வர் கூறி னார். இந்திய அரசமைப்புச் சட்டம் அங்கீக ரிக்கப்பட்டு 73 ஆண்டுகள் ஆகிறது. 1946 முதல் 1949 வரை மூன்று ஆண்டுகள் அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புமிக்க விவாதங்களுக்குப் பிறகு, மக்களுக்கு வழங்கப்பட்ட அரசமைப்பு உருவாக்கப்பட்டது. நமது நாட்டின் அரசமைப்பு ஒரு ஜனநாயக இறையாண்மை கொண்ட குடியரசாகக் கருதப்பட்டது என்றும் முதல்வர் கூறினார். நவம்பர் 26 இந்திய அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் கூறியதாவது: தேச விடுதலைப் போராட்டத்தின் விழுமி யங்களை உள்வாங்கி, அடிப்படை உரிமை கள், சிவில் உரிமைகள், பொருளாதார சமத்து வம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரச மைப்பு உருவாக்கப்பட்டது. விடுதலைக்குப் பிறகும், பொருளாதார ஏற்றத்தாழ்வும் இரக்க மற்ற சமூக ஒடுக்குமுறையும் அரசமைப்பு விழு மியங்களை உணரவிடாமல் தடுத்தது. மக்கள் போராட்டங்களும், சட்டப் போராட்டங்களும் உரிமைகளை பாதுகாப்பதற்காக நடத்தப் பட்டன.

விடுதலை இந்தியாவில் சிவில் உரிமைக ளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட புகழ் பெற்ற சட்டப் போராட்டம் ஏ.கே.கோபாலன் எதிர் மதராஸ் மாநில வழக்கு. விடுதலைப் போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் தலைவருமான ஏ.கே.ஜி.யின் சட்டப் போராட்டம் அப்போது வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த வழக்கில் சிறுபான்மையாக எழுதப்பட்ட தீர்ப்பு சரியானது என்று பல பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆதார் வழக்கின் தீர்ப்பின் ஊடாக உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. நிலச் சீர்திருத்தம் மற்றும் பொருளாதார சமத்துவத்துக்காகவும் தீண்டாமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் விடுதலை பெற்ற தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்க ளுக்காக வழங்கிய அரசமைப்புச் சட்டத்தை காக்க வேண்டும் என்று மக்களும் அவர்களை வழிநடத்தும் வெகுஜன இயக்கங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நம் நாட்டில் மதச்சார்பின்மை, ஜன நாயகம், கூட்டாட்சி ஆகிய விழுமியங்கள் கடு மையான சவால்களைச் சந்தித்து வருகின்றன. மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கு வதற்கான நடவடிக்கைகளும் உள்ளன. பொரு ளாதாரத்தின் தூண்களாகத் திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட பொதுத் துறை நிறுவனங்கள் ஒவ்வொன்றாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உழைப்பவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

உயர்கல்வியில் மதச்சார்பற்ற கொள்கை கள் வேரறுக்கப்படுகின்றன. இந்த கொள்கை களுக்கு முரணானவை நேரடியாகவும் மறை முகமாகவும் செயல்படுத்தப்படுகின்றன. இவை  அனைத்தும் சட்ட ரீதியாகவும், பொது வெளியில் போராட்டங்கள் மூலமாகவும் எதிர்க்கப்படு கின்றன. இந்த எதிர்ப்புதான் அரசமைப்பு சாசன பாதுகாப்பின் குரல். நமது பன்மைத்துவத்தை அழித்து, எதிர்கால சந்ததியினரின் மனதில் பிற்போக்குத்தனமான சிந்தனைகளை விதைக்க பாடப்புத்தகங்களின் உள்ளடக்கத்தை மாற்றும் அபாயகரமான செயல் நடந்து கொண்டி ருக்கிறது. உயர்கல்வித் துறையில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிவியல் விழிப்பு ணர்வை உருவாக்குவது அரசமைப்பின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும்.

அரசமைப்புச் சட்டம் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால், தன்னிறைவு கொண்ட மாநி லங்கள், வலுவான ஒன்றியம், செயல்படும் உள்ளூர் அரசாங்கங்கள் என்ற உண்மையான கூட்டாட்சிக் கருத்தை செயல்படுத்துவதற்கான தடைகள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள், நாட்டின் வளர்ச்சியில் ஒன்றிய அரசுக்கு இணையான பங்கு வகிக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயகக் கோட்பாடு மறக்கடிக்கப்படுகிறது. இந்த அரசமைப்பு தினத்தின் கவலைகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுக்க உயர் அரசமைப்பு அலுவல கங்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. நமது அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள் ளப்பட்டு 73 ஆண்டுகள் நிறைவடைந்தாலும் எதிர்கொள்ளும் சவால்கள் சாதாரணமானவை அல்ல; இத்தகைய சவால்களை எதிர்கொள்வ தற்கும், அரசமைப்பு விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பாதுகாப்பதற்கும் நாம் உறுதிமொழியை புதுப்பிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.