கோழிக்கோடு, ஜன.2- சிறுபான்மையினரை கலங்க வைக்கும் சங்பரிவார் நடவடிக்கைக்கு எதிராக ஒருங்கி ணைந்து குரல் எழுப்ப வேண்டிய நிலையில், வாய்மூடி சாட்சியாக இருப்பது சரியல்ல என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடை பெற்ற முஜாஹித் மாநில மாநாட்டின் நிறைவு அமர்வைத் துவக்கி வைத்து அவர் மேலும் பேசியதாவது: எதிர்க்க வேண்டியதை வெளிப்படையாக எதிர்ப்பது சாத்தியமாக வேண்டும். இது போன்ற கட்டங்களில் அமைதியாக இருப்பது நல்லதல்ல. பாஜக மதத்தைப் பயன்படுத்தி மக்களைப் பிளவுபடுத்துகிறது. சில இடங்க ளில் சில சிறுபான்மையினரை திருப்திப் படுத்து கின்றனர். மறுபுறம், முக்கியமான இரண்டு சிறுபான்மையினர் கொடூரமாக தாக்கப்படு கிறார்கள். இதற்குப் பொருத்தமான சமூகச் சூழல் இல்லாத இடங்களில் அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள் ளப்படுகிறது.
இந்த மாநாட்டிலேயே சில தவறான வாதங்கள் எழுப்பப்பட்டதாக தெரியவருகிறது. எனது நண்பர் ஒருவர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு கண்டேன். 34 ஆண்டுக ளுக்குப் பிறகு வங்காளத்தில் ஆட்சியை சிபிஎம் இழந்த கதையை அவர் கூறுகிறார். சிறு பான்மையினர் மாநாட்டிற்கு வந்து சிபிஎம்-ஐ எதிர்த்துதான் பேச வேண்டுமா? இங்கு நாம் விவாதிக்க வேண்டியது வகுப்புவாதத்தின் மீது நாம் எடுக்க வேண்டிய அணுகுமுறையை குறித்துத்தான். ‘சங்பரிவாரை நாங்கள் எதிர் கொள்வோம்’ என்கிறார் அவர். இந்தியா இன்று சந்திக்கும் பேரழிவை நம்மால் மட்டும் எதிர்கொள்ள முடியாது என்பதை உணர வேண் டும். இல்லையென்றால், குழியில் விழுவதற்கு சமம். வெட்டு அரிவாளுடன் நிற்பவனிடம் கழுத்தை நீட்டக்கூடாது.
சிறுபான்மையினர் மட்டுமே எதிர்த்து விட முடியாது
ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவாரத்தின் நோக்கங்களை நிர்வாக மட்டத்தில் செயல் படுத்தும் நகர்வுகள் நடக்கின்றன. இதை யெல்லாம் சேர்ந்து எதிர்க்க வேண்டிய கட்டத் தில் தவறான சித்திரம் தீட்ட வேண்டாம். சிறு பான்மையினரில் சிலர் தாங்களாகவே இந்த அச்சுறுத்தலைச் சமாளிக்கலாம் என்ற யோச னையுடன் முன்வந்துள்ளனர். இது தற்கொலை. மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வேறுபாடுகளை அதிகப்படுத்தும் எந்தவொரு தலையீடும் பயன ளிக்காது. இந்தியாவில் எந்த மதமும் மேலே அல்லது கீழே இல்லை. ஆனால், சட்டத்தின் மூலமாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தியும் இந்தக் கண்ணோட்டத்தைத் தகர்க்க முயற்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன. குடியுரிமை சட்டம் போன்ற விசயங்கள் இந்தியாவில் நடக்கக் கூடாதது. இந்தியாவில் மத சிறு பான்மையினரின் பாதுகாப்பு உறுதிப்படுத் தியே ஆக வேண்டும். அனைத்து குடிமக்களும் அச்சமின்றி வாழ வேண்டும். பாகுபாடும், பிரி வினையும் இல்லாத இடமாக மாற வேண் டும்.
சமூக சீர்திருத்தத்தில்...
கேரள மறுமலர்ச்சியில் முஸ்லிம் ஐக்கிய யூனியன் போன்ற இயக்கங்களும் சமூக சீர் திருத்தவாதிகளும் பங்கு வகித்துள்ளனர். ஆனால் வரலாற்றுப் புத்தகங்களில் இருந்து அத்தகைய தொடர்புகளை நீக்கி, தவறான வர லாற்றை உருவாக்குவதற்கான முயற்சி நடக்கி றது. முஸ்லீம் சிறுமிகளுக்கு கல்வி உரிமையும், எழுத்துச் சுதந்திரமும் மறுக்கப்பட்டு, மலை யாளம் நரகத்தின் மொழியாகப் பிரச்சாரம் செய்யப்பட்டபோது, அதற்கு எதிரான நிலைப் பாட்டை எடுத்தவர்கள் சமூகத்தின் சமூக சீர் திருத்தவாதிகள். கேரளாவை அறிவுசார் சமுதாயமாகவும், புதுமையான தேசமாகவும் மாற்ற வேண்டும். பெண் விடுதலை இல்லாமல் சமத்துவ சமு தாயத்தை உருவாக்க முடியாது. சமூக சீர்திருத் தித்திற்காக உருவாக்கப்பட்ட சில இயக்கங் கள் இனவாத அடையாளத்துடன் சுருங்கி விடக்கூடாது. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.