திருவனந்தபுரம், அக்.19- சமுதாயத்தின் முன் நாம் யாரும் கேலிக்கு உள்ளாகிவிடக்கூடாது என்றும், யாரையும் யாரும் குறை கூறக்கூடாது என்ற நிலைப்பாட்டை பொதுவாக ஏற்றுக்கொள்வது நமது சமுதாயத்திற்கு சொந்தமானது அல்ல என்றும் முதல்வர் கூறினார். தன்னை விமர்சித்தால் அமைச்சர்களின் பதவி களை ரத்து செய்வேன் என்கிற ஆளு நரின் மிரட்டல் குறித்து செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இதை தெரிவித்தார். யாரும் யாரையும் விமர்சிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை ஏற்பது நமது சமூகத்தின் முறையல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் விமர்சனம், சுயவிமர்சனம் மற்றும் கருத்தை வெளிப்படுத்த சுதந்திரம் அளிக்கிறது. நமது நாடு கூட்டாட்சி கொள்கைகளை பின்பற்றும் நாடு. இது நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கும் நாடு. கூட்டாட்சி அமைப்பில் ஆளுநரின் பதவிக்கான கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்ச ரவையின் பதவிக்கான, கடமை கள் மற்றும் பொறுப்புகள் ஆகிய வற்றை அரசமைப்பு தெளிவாக வரை யறுத்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் மேலும் தெளிவாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை யின் ஆலோசனை மற்றும் உதவி யோடு செயல்படுவது ஆளுநரின் பொதுவான பொறுப்பு.
டாக்டர். அம்பேத்கர் அவர்களே, ஆளுநரின் விருப்ப அதிகாரங்கள் ‘மிகக் குறுகியது’ என்று கூறினார். தில்லி அரசு மற்றும் துணைநிலை ஆளு நர் மற்றும் உச்சநீதிமன்றத்துக்கு இடையேயான வழக்கில், அமைச்சரவையின் ஆலோசனைப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சி அல்லது முன்னணியின் தலைவர் முதலமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவ்வாறு நியமிக்கப்பட்ட முதலமைச்சரால் அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அமைச்சர்கள் தமது ராஜி னாமாவை முதல்வரிடம்தான் சமர்பிக்க வேண்டும். அதை முதல்வர்தான் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டும். முதல்வரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் முடிவெடுக்கிறார். இவை அரசமைப்பின் சரியான விதிகள் மற்றும் நாட்டில் சந்தேகத்திற்கு இட மின்றி பின்பற்றப்படும் நடைமுறை கள். இது நமது அரசலமைப்புச் சட்டம் அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? அப்படியானால், அது (ஆளுநர் கூறியது) அரசமைப்புக்கு எதிரானது அல்லவா? நமது நாட்டின் அரசமைப்பு சாசனம் மற்றும் சட்ட அமைப்பு விதிகளுக்கு முரணாக செயல்படுவேன் என்று ஒருவர் அறி வித்துவிட்டு நகர்ந்தால் அது சரியான விஷயம் என்று கூற முடியாது. அது செல்லாது எனவும் முதல்வர் குறிப்பிட்டார்.