கண்ணூர் பல்கலை க்கழக செனட் மாணவர் பிரதிநிதித் தேர்த லில் இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ )அமோக வெற்றி பெற்றது. பத்தில் ஆறு இடங்களில் எஸ்எப்ஐ வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
எஸ்எப்ஐ அணியில் போட்டியிட்ட வைஷ்ணவ் மகேந்திரன், பி.எஸ். சஞ்சீவ், அகிலா பீட்டர், கே. ஆர்யா, அல்னா வினோத், நந்தகோபால் ஆகியோர் வெற்றி பெற்றனர். கேஎஸ்யு வேட்பாளர்கள் அஷித் அசோகன் மற்றும் சூர்யா அலெக்ஸ், எம்எஸ்எப் வேட்பாளர்கள் டி.பி. பர்ஹானா மற்றும் டி.கே.முஹம்மது ஹசீப் ஆகியோர் செனட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செனட் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பா ளர்களுடன் எஸ்.எப்.ஐ., கண் ணூர் நகரில் வெற்றி ஊர்வ லம் நடத்தியது. எஸ்எப்ஐ மாநில செயலாளர் பி.எம். ஆர்ஷோ, தலைவர் கே. அனுஸ்ரீ, மாவட்ட செயலா ளர் பி.எஸ்.சஞ்சீவ் உள்ளிட்டோர் பேசினர்.