கொச்சி, ஜுன் 22- வழக்கு விசாரணையின் போது நீதிபதிகளின் வாய்மொழி கருத்துக்களை எடுத்துக் கொண்டு நியாயமற்ற கருத்துகள் மற்றும் விளக்கங்களை அளித்து கண்ணியத்துக்கும் நற்பெயருக்கும் சேதம் விளைவிப்பதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இணைப் பேராசிரியராக பிரியா வர்கீஸ் நிய மனம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற அமர்வு இதை தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் வெற்றி பெற்றாலும், இதுபோன்ற கருத்துக்களால் வழக்காடி க்கு ஏற்படும் பாதிப்பு நீங்காது என்பதை இந்த தீர்ப்பு நமக்கு நினைவூட்டுகிறது. இந்த வழக்கின் விசார ணையின் போது நீதிபதிகள் கூறிய கருத்துகளை, விசயத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது என்று இந்திய தலைமை நீதிபதியே கூறியதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்திகளை வெளியிடும் போது ஊடகங்கள் கவனமாக இருக்க வேண்டும். தனிநபருக்கான உரிமை அரசமைப்பின் கீழ் ஒரு அடிப்படை உரிமையாகும். தனியுரிமை என்பது ஒருவரின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமையையும் குறிக்கிறது. இந்த பாதுகாப்பு அரசின் தன்னிச்சையான செயல்களில் இருந்து மட்டுமல்ல, ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களிடமிருந்தும் பெறப்பட வேண்டும். இந்த கருத்துகளை ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பொறுப்புடன் செய்திகளை வெளியிடுவ தற்கான நடத்தை நெறிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.