கொச்சி, ஜூலை 13- கேரள உயர் நீதிமன்றத்தின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக் கைகளின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு சேவைக ளை மேம்படுத்த கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல் கலைக்கழகம் உயர் நீதிமன்றத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி முகமது முஷ்டாக் மற்றும் குசாட் துணைவேந்தர் டாக்டர். பி.ஜி.சங்க ரன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. குசாட் உயர் நீதிமன்றத்திற்கான மூன்று திட்டங்களை முடித்துள்ளது, ஒரே தன்மைகொண்ட வழக்குகளைக் கண்டறிதல், பொது மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்க சட்ட குறைதீர் கூட்டம் நடத்தல் மற்றும் சட்ட ஆவணங்களை விரைவாகக் கண்டறிதல் ஆகியவை இந்த சேவைகள். இவை ஐபிஎம் வாட்சன்எக்ஸ் (IBM WatsonX) இயங்குதளத்தில் கிடைக்கின்றன.
சட்டத் துறையில் அதிக அளவில் ஏஐ அடிப்படையிலான சேவைகளை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தா னது. சட்ட அமைப்பின் செயல்திறன், துல்லியம் மற்றும் அணுகல் தன்மையை மேம்படுத்த, குசாட் உடனான அதன் ஒத்துழைப் பைத் தொடர, ஜெனரல் ஏஐ மாநாட்டில் உயர் நீதிமன்றம் ஆர்வம் காட்டியது. தரவுப் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்வதற்காக உயர் நீதிமன்றத்திற்கான செயற்கை நுண்ண றிவு முறையில் இயங்கும் தீர்ப்பு, தேடல் போர்டல், ஏஐ பயன் பாடு போன்ற சேவைகளை குசாட் தயார் செய்யும்.
டிஜிட்டலைசேஷன் செய்வதில் உயர் நீதிமன்றம் மிகவும் முன்னோக்கி உள்ளது என்று பொறுப்பு தலைமை நீதிபதி ஏ முகமது முஷ்டாக் கூறினார். ஆன்லைனில் வழக்குகளை சமர்பிப்பதற்கான நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. ஐடி சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள் மேலும் மேம்படுத்துவதும், செலவுகளைக் குறைப்பதும் நோக்கமாகும் என்றார்.