திருவனந்தபுரம், பிப்.4- கேரளத்தில் வறுமையை முற்றாக ஒழிக்க பட்ஜெட்டில் ரூ.50 கோடியை நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் ஒதுக்கீடு செய்துள்ளார். இத்திட்டம் ஐந் தாண்டுகளுக்குள் தீவிர வறு மையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஒரு அங்க மாக 64006 மிகவும் வறிய குடும்பங்கள் கண்ட றியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி யமைச்சர் தெரிவித்தார். மாநிலத்தில் லைஃப் மிஷன் திட்டத்திற்கு ரூ.1436 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லைஃப் மிஷன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு 71,861 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கேரளா தொழில்துறைக்கு உகந்த மாநிலம் என்று நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். குடும்பஸ்ரீக்கு ரூ.260 கோடியும், அய்யன்காளி வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கு 150 கோடியும் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே குறைந்த பணவீக்கம் உள்ள மாநி லம் கேரளா என்றும், கேரளா மீண்டும் வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவும் நிதியமைச்சர் கூறினார்.