வயநாடு துயர் துடைப்புப் பணியின் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் இந்திய மாணவர் சங்கம் (SFI) தலைமையில் மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 1 லட்சத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம், சங்கத்தின் மாநிலத் தலைவர் தௌ. சம்சீர் அகமது, மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி, மத்தியக்குழு உறுப்பினர் சி. மிருதுளா மாநில இணைச் செயலாளர் கே. மோகன், மாநிலத் துணைத் தலைவர் தே. சரவணன், பா. ஆனந்த் ஆகியோர் வழங்கினர். கேரள மாநிலத் தலைவர் அனுஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.