states

img

சங் பரிவார் சிந்தனைகளை திணிப்பது எளிதல்ல

திருவனந்தபுரம், நவ.14- உயர்கல்வித் துறையை அழிக்கும் சங்பரிவார் நிகழ்ச்சி நிரலுக்கு கேரளா வில் மதிப்பில்லை என்பதை உறுதி யான குரலில் சொல்ல செவ்வாய்க் கிழமை (நவ.15) நடக்கும் ஆளுநர் மாளிகை அணிவகுப்பு ஒரு வாய்ப்பாக அமையும் என்று இயக்குநர் ஷாஜி என் கருண் கூறினார்.  இதுகுறித்து ஷாஜி என் கருண் மேலும் கூறியதாவது: அணிவகுப்பில் பெருமளவிலான மக்கள் பங்கேற்பு நடைபெற உள் ளது. கல்வித்துறையில் மிகப்பெரும் பாய்ச்சலை நோக்கி நகரும் கேரளா வின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடி யாது என்பதை உயர்கல்வி பாது காப்பு சங்கம் மூலம் சங் பரிவாரத்தி னர் புரிந்துகொள்வார்கள். மற்ற மாநிலங்களைப் போல்  கேரளாவில் சங் பரிவார் சிந்தனை களை திணிப்பது எளிதல்ல. அறிவின் உலகை உருவாக்குவதற்குப் பதிலாக அறியாமையை பரப்பி மக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை கேரள மக்கள் நீண்டகாலமாக நிரா கரித்து வருகின்றனர். முன்னேற்றத் தைத் தடுப்பது கட்சிகளுக்கோ அல்லது அரசமைப்புப் பொறுப்பை வகிப்பவர்களின் வேலை அல்ல. கேரள முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகள் மக்களால் பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.