திருவனந்தபுரம், பிப்.4- கேரளாவின் நிர்வாக மையமான தலைமை செயலகத்தில் முழுமை யான கே-போன் இணைய இணைப்பு வியாழனன்று (பிப்.2)வழங்கப் பட்டது. கே-போன் அதிவேக இணையம் தலைமை செயலகத்தின் பிரதான கட்டி டத்திலும் இரண்டு இணைப்புகளிலும் வழங்கப்பட்டுள்ளது. இதன் வேகம் 500 எம்பிபிஎஸ். மாநிலத்தில் 30,000 அரசு அலுவலகங்கள் மற்றும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச அதி வேக இணையம் வழங்குவது எல்.டி.எஃப் அரசின் திட்டம். ஏற்கனவே 12,157 அலுவலகங்க ளில் இணைய வசதி செய்யப்பட்டுள் ளது. 26,759 அரசு அலுவலகங்களில் தொடர்புடைய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு விரை வில் இணைப்பு வழங்க முடியும் என கேஎஸ்ஐடிஐஎல் நிர்வாக இயக்குநர் டாக்டர் சந்தோஷ்பாபு தெரிவித்தார். முதற்கட்டமாக வறுமைக் கோட்டு க்கு கீழ் உள்ள 14,000 குடும்பங்களுக்கு இலவச இணையம் வழங்கும் செயல் முறை இறுதிக் கட்டத்தில் உள்ளது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு, முதற் கட்டமாக 100 இணைப்புகள் வழங்கப் படுகிறது.