states

img

இந்திய கவிஞருக்கு டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்திய கூகுள்!  

பிரபல மலையாள கவிஞர் பாலாமணி அம்மாவின் 113வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது.  

கூகுள் நிறுவனம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளில் டூடுல் வெளியிட்டு சிறப்பிக்கும். அந்தவகையில், பிரபல மலையாள கவிஞர் பாலாமணி அம்மாவின் 113வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது.  "மலையாள இலக்கியத்தின் பாட்டி" என்று அழைக்கப்படும் பாலாமணி அம்மாவின் இந்த டூடுலை கேரளாவைச் சேர்ந்த ஓவியர் தேவிகா ராமச்சந்திரன் வடிவமைத்துள்ளார்.  

1909 ஆம் ஆண்டு திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புன்னயூர்குளத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லமான நாலாபட்டில், சித்தஞ்சூர் குன்ஹுன்னி ராஜா மற்றும் நலபட் கொச்சுகுட்டி ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவர் எந்த முறையான பயிற்சியையும் அல்லது கல்வியையும் பெறவில்லை. மாறாக ஒரு பிரபலமான மலையாள கவிஞராக இருந்த அவரது மாமா நலப்பட் நாராயண மேனன் மூலம் வீட்டில் கல்வி பயின்றார். சிறு வயது முதலே கவிதைகள் எழுதுவதிலும், வாசிப்பதிலும் ஆர்வம் உடையவர்.

1930 ஆம் ஆண்டு கூப்புக்காய் என்ற கவிதை தொகுப்பை முதலில் வெளியிட்டார். பாலாமணியின் எழுத்து திறனுக்கு கொச்சின் மன்னரான பர்க்ஷித் தாம்பரா, சாகித்ய நிபுணர் விருது வழங்கினார்.

இந்திய புராணங்களின் ஆர்வமுள்ள அம்மாவின் கவிதைகள், பெண் கதாபாத்திரங்கள் பற்றிய பாரம்பரிய புரிதலின் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அவரது ஆரம்பக்கால கவிதைகள் தாய்மையை ஒரு புதிய வெளிச்சத்தில் பெருமைப்படுத்தியது. இதனால் அவர் தாய்மையின் கவிஞர் என்று அழைக்கப்பட்டார்.      

அம்மா (1934), முத்தச்சி (1962) மற்றும் மழுவின் கதை (1966) ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகள் ஆகும். அவர் கவிதை, உரைநடை மற்றும் மொழிபெயர்ப்புகளின் 20 க்கும் மேற்பட்ட தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் 1984 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட கமலா தாஸின் தாய் ஆவார்.

1987ல் இந்தியாவின் மூன்றாது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம பூஷன் பெற்றார். 1965ல் முத்தசிகு சாகித்ய அகாடமி விருது பெற்றார். 1995ல் நிவேத்யத்திற்காக சரஸ்வதி சம்மான் விருது, லலிதாம்பிகை அந்தர்ஜனம் விருது என பல விருதுகளை பெற்றார். அவர் 2004 இல் காலமானார்.  

குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் மீதான அவரது அன்பை விவரிக்கும் விவரிக்கும் அவரது கவிதைகளால் மலையாள கவிதையின் அம்மா மற்றும் முத்தஸ்ஸி(பாட்டி) என்ற பட்டங்களை பெற்றார்.