states

img

வரலாற்று அறிவை ஊனமாக்கும் திட்டமிட்ட முயற்சிகள்

வ ரலாற்று அறிவை ஊனமாக்கும் திட்டமிட்ட  முயற்சிகள் நடப்பதாக வரலாற்று காங்கிரஸில் கேரள உயர் கல்வித்துறை  அமைச்சர் ஆர். பிந்து எச்சரிக்கை விடுத்தார்.

திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் நடந்த தென்னிந்திய வரலாற்று காங்கிரஸை ஆன்லைனில் துவக்கிவைத்த அமைச்சர் மேலும் கூறியதாவது: சில பிரிவினரின் அரசியல் மற்றும் சித்தாந்த மேலாதி க்கத்திற்கான விரிவான திட்டமே இத்தகைய முயற்சி களுக்கு காரணம். இந்து மன்னர்களின் வெற்றியாக மட்டுமே வரலாறு எழுதப்படுகிறது. அவர்களின்  நிகழ்ச்சி களை பரப்புவதற்கு வரலாற்றை ஒரு கருவியாகப் பய ன்படுத்துவதால், சமூகத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பு மற்றும் பன்மைத்துவ கலாச்சாரம் மோசமாகப் பாதிக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் உள்ள பதிவு களில் இருந்து ரவீந்திரநாத் தாகூரின் பெயர் நீக்கப்பட்ட தைக் குறிப்பிட்ட அவர், அறிவியல் மற்றும் முற்போக் கான கண்ணோட்டத்தை நிலைநிறுத்துபவர்கள் இருட்ட டிப்பு செய்யப்படுகிறார்கள். இதனால்  எதிர்மறையான இத்தகைய மாற்றங்கள்  செய்யப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

வரலாற்றில் இருந்து  சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பங்கு திரித்து அல்லது முழுமையாகப் புறக்கணிக்கப்படுகிறது.  இதன் மூலம் அவர்கள் மேலும் ஓரங்கட்டப்படுவதாக அமைச்சர் தெரி வித்தார். “என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் முகலாய வம்சத்தைப் பற்றிய குறிப்புகள் மறைந்துவிட்டதைக் காண முடிகிறது, அதே நேரத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையின் முகலாயத் தோட்டம், அம்ரித் உத்யன்  என மறுபெயரிடப்பட்டுள்ளது. முஸ்லிம் பெயர்களைக் கொண்ட அனைத்து நகரங்கள், சந்திப்புகள் மற்றும்  பிற இடங்களின் பெயர்கள் அவசரமாக மாற்றப்படு கின்றன. இதன் சமீபத்திய அத்தியாயம் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் தேசத்திற்கு மறுபெயரிடுவ தற்கான முயற்சியாகும்” என்று அவர் குறிப்பிட்டார்.

விளிம்புநிலை சமூகங்களின் போராட்டங்கள் தொடர் பான குறிப்புகள் அகற்றப்படுவதாக டாக்டர் பிந்து மேலும் கூறினார். “2016 ஆம் ஆண்டிலேயே, நாடார் பெண்களின் மார்பகங்களை மறைக்கும் உரிமை (தோள்சீலை போராட்டம்) குறித்த அத்தியாயத்தை நீக்கு மாறு சிபிஎஸ்இயிடம் என்சிஇஆர்டி கேட்டுக் கொண்டது. இதுபோல், பெரும்பாலான தலைவர்கள் முஸ்லிம் களாக இருந்ததால் மலபார் கலகம் உள்ளிட்ட பிற  வீரப் போராட்டங்கள் பற்றிய குறிப்புகளும் நீக்கப் பட்டன” என்று டாக்டர் பிந்து கூறினார். தொடக்க அமர்வுக்கு தலைமை தாங்கிய தென் இந்திய வரலாற்று காங்கிரஸ் பொதுத் தலை வர் எஸ்.சந்திரசேகர், ‘தென்னிந்தியாவும் காந்தியும்’ மற்றும் ஆங்கிலேயர் காலனித்துவ காலத்தில் தென்னிந்தியாவின் ஆட்சிமுறை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் கேசவன் வேலுதாட் சிறப்புரையாற்றினார்.