சென்னை, மார்ச் 19- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு காயிதே மில் லத்தின் பேரனும் கல்வியாள ருமான எம்.ஜி.தாவுத் மியா கான் கடிதம் ஒன்றை எழுதி யுள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது: “வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட உள் ளார்.
அத்தொகுதியில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பெண்கள் அமைப்பின் பொதுச்செயலா ளருமான ஆனி ராஜா போட்டியிடுகிறார். கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை, எல்டிஎப் மற்றும் யுடிஎப் ஆகிய கட்சி கள் எதிர் எதிர் அணியில் உள் ளன. இக்கட்சிகள் தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணி யில் மிகப் பெரிய தூண்களாக உள்ளன. இடதுசாரி கட்சிகள் எப்போதும் பாஜகவின் கொள்கைகளை எதிர்த்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி யின் தலைவராக இருக்கும் தங்களுக்கு, பல தொகுதி களில் வெற்றிக்கான வாய்ப்பு கள் உள்ளன.
கேரள மாநிலத்தைப் பொறுத்த அளவில் இடது சாரி கட்சிகளுக்கு ஒரு குறிப் பிட்ட அளவிலான தொகுதி களிலேயே வெற்றி வாய்ப்பு கள் உள்ளன. காயிதே மில் லத்தின் பேரனான எனக்கு பல்வேறு கட்சிகளுடன் நல்ல நட்புறவு இருந்து வருகிறது.
அந்த வகையில் கேரளாவில் மலபார் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுடன் எனக்கு 50 ஆண்டு கால பழக்கம் உள் ளது. இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்காளர்கள், இந் திய கம்யூனிஸ்ட் தலைவ ருக்கு தங்கள் வாக்குகளை செலுத்த வாய்ப்பு உள்ளது. எனவே இத்தொகுதியை விடுத்து, தாங்கள் வேறு தொகுதியில் போட்டியிட பரி சீலிக்க வேண்டும்.”
இவ்வாறு தாவூத் மியா கான் குறிப்பிட்டுள்ளார்.