திருவனந்தபுரம், மார்ச் 17- கேரள மக்களின் இதயங்களை கவர்ந்த அணிவகுப்பு தலைநகர் மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் தலைமை யிலான ‘மக்கள் பாதுகாப்பு அணிவகுப்பு’ வியாழனன்று திருவனந்தபுரத்தின் மறு மலர்ச்சி வீதி வழியாகச் சென்றது. கேரளாவின் மக்கள் இயக்க வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லைக் குறித்தது இந்த அணிவகுப்பு. திருவனந்தபுரம் மாவட்ட எல் லையான பாரிப்பள்ளி முக்கடா சந்திப்பில் அணித்தலைவர் எம்.வி.கோவிந்தனை சிபிஐஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆனாவூர் நாகப்பன், மாவட்டச் செயலாளர் வி.ஜாய் உள்ளிட்டோர் தலைப்பாகை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனர். அமைச்சர் வி.சிவன்குட்டி, கடகம்பள்ளி சுரேந்திரன் எம்.எல்.ஏ., ஆனத்தலவட்டம் ஆனந்தன், மாநிலக்குழு உறுப்பினர் எம். விஜயகுமார், ஏ.ஏ.ரஹீம் எம்.பி., உள் ளிட்டோர் வரவேற்றனர். மாநிலக்குழு உறுப் பினர் டி.என்.சீமா, மாவட்டச் செயலாளர் பி.பி.முரளி, டி.கே.முரளி எம்.எல்.ஏ., டாக்டர் ஷிஜுகான், ஓ.எஸ்.அம்பிகா எம்.எல்.ஏ., கே.எஸ்.சுனில் குமார், கே.சி.விக்ரமன், எஸ். புஷ்பலதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மாவட்ட எல்லையில் இருந்து நூற்றுக் கணக்கான இருசக்கர வாகனங்களுடன், மாவட்டத்தின் முதல் வரவேற்பு மையமான வர்க்கலாவை வந்தடைந்தனர். பாளையங் குன்றம், அயிரூர், நடையாறு, புன்னமூடு, ரயில் நிலையம் வழியாக வந்த ஊர்வ லத்துக்கு, வர்க்கலா நகராட்சி அலுவலகம் முன் செந்தொண்டர்கள் அணிவகுப்பு மரி யாதை செலுத்தினர். வர்க்கலா மைதா னத்தில் உள்ள புரவலன் நகரத்திற்கு அணி அணியாய் மக்கள் ஆர்ப்பரித்து வந்தனர். பல்வேறு அரசியல், கலாசார, சமூகத் துறை களைச் சேர்ந்த பிரமுகர்கள் உட்பட பலர் அணிவகுப்பு தலைவர் மற்றும் உறுப்பினர் களுக்கு புத்தகங்கள் வழங்கி வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வி.ஜாய் தலைமை வகித்தார். பிளாக் செயலாளர் எஸ்.ஷாஜகான் வரவேற்றார். மூத்த தலை வர் ஆனத்தலவட்டம் ஆனந்தன், சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், எம்.விஜயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.முரளி, மடவூர் அனில், வி.கே.மது, கே.சி.விக்கிரமன், வர் கலை பகுதி செயலாளர் எம்.கே.யூசுப், கிளி மானூர் பகுதி செயலாளர் தட்டத்துமலை ஜெயச்சந்திரன், மகிளா சங்க மாவட்ட செய லாளர் ஸ்ரீஜா ஷைஜுதேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருது பெற்ற தென்னை ஏறும் பயிற்சியா ளர் சுனிலி மற்றும் இளம் மேஜிக் நியுணர் ஹாரிஸ் தாஹா ஆகியோர் கவுரவிக்கப்பட்ட னர். மங்களபுரத்தில் விழாக்கோலம் பூண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களால் நிரம்பி வழிந்த ஆடிட்டோரியம் பகுதியில் அணிவகுப்பு தலைவரை மேடைக்கு வர வழைக்க செந்தொண்டர்கள் சிரமப்பட்டனர். தியாகி மதன்விளை ஜாகிரின் சகோதரி ஷீபா மற்றும் டெக்கிஸ் ஆகியோர் வரவேற்பில் கலந்து கொண்டனர்
அணிவகுப்பு இன்று நிறைவு
திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை (மார்ச் 18) மாலை நடைபெறும் பிரம் மாண்ட பொதுக்கூட்டத்தில் மக்கள் பாது காப்பு அணிவகுப்பு நிறைவடைய உள்ளது. புத்தரிக்கண்டம் மைதானத்தில் நடக்கும் இக்கூட்டத்தின் கட்சியின் பொது செயலா ளர் சீத்தாராம் யெச்சூரி, முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இதற்காக தலைநகரே விழாக் கோலம் பூண்டு செம்மயமாக காட்சி அளிக்கி றது.