மேப்பாடி, ஜூலை 31- சூரல்மலையில் பெய்லி பாலம் கட்டும் பணியை ராணுவம் தொடங்கியது. பாலம் கட்டினால், முண்டக்கை பகுதியில் மீட்பு பணி எளிதாகும். பேரிடர் பகுதிக்கு பெரிய வாகனங்கள் மற்றும் டாரஸ் உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு பாலம் கட்டுமானம் உதவும்.
திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு முண்டக்கை புஞ்சிரிமுட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. விபத்து நடந்த தருணத்தி லிருந்து, பல்வேறு இராணுவப் பிரிவுகள் ஒன்றிணைந்து அப்பகுதியில் தீவிர மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. செவ்வா யன்று தற்காலிக பாலம் கட்டப்பட்டு பலர் மீட்கப்பட்டனர்.