திருவனந்தபுரம், மே 29- திருவனந்தபுரத்தில் ஜூன் ஒன்றாம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவிலான பள்ளி நுழைவுத் திருவிழாவை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார் என்று பொதுக் கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்தார். இம்முறை மாநில அளவிலான நுழைவுத் திருவிழா மலையடிவார பள்ளி வளாகத்தில் நடக்கிறது. அதுமட்டுமின்றி பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் தனித்தனி நுழைவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இசையமைப்பாளரான முருகன் காட்டாக்கடை இசையமைத்து மஞ்சரி பாடிய நுழைவுத் திருவிழா பாடல் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பள்ளிகள் திறப்பதற்கு முன் தயார் செய்ய வேண்டிய வற்றை குறைபாடற்ற முறையில் செயல்படுத்த அனைத்து துறை களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரம், மண்சரிவு மற்றும் நிலச்சரிவு பகுதிகளில் மாணவர்களுக்கான பேரிடர் தடுப்பு பயிற்சி, பள்ளி துப்புரவு பிரச்சாரம், ஆசிரியர் பயிற்சி, பழங்குடியினர் பகுதிகளில் படிக்க கூடுதல் திட்டங்கள், நிழல் போலீஸ், வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு உறுதி செய்தல், பள்ளிகளில் தண்ணீர், மின்சாரம், கழிப்பறைகள் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். பத்திரிகையாளர் சந்திப்பில் நுழைவுத் திருவிழா பாடலும் வெளியிடப்பட்டது.