states

img

‘கடலோர சபை’யில் முதல்வர் பினராயி விஜயன்

கேரளத்தில் கரையோர மக்களின் பிரச்சனைகள் குறித்து ஆராய்வோம், அவர்களை அரவணைத்துச் செல்வோம் என்பதை மையமாகவைத்து ‘கடலோர சபை’ எனும் நிகழ்ச்சி ஞாயிறன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மீன்வளம் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஸஜி செரியான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பினராயி விஜயன் கடலோர சபை நிகழ்வைத் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். கேரளாவில் 37 கரையோரத் தொகுதிகளிலும் கடலோர சபை எனும் இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.