பாலக்காடு, அக்.26- வகுப்புவாதத்தால் பீடிக்கப்பட்ட கெட்டப் புத்தியை முற்றிலும் தனிமைப்படுத்த வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலி யுறுத்தினார். பாலக்காட்டில் வகுப்புவாத எதிர்ப்பு பேரணி யை துவக்கி வைத்து, தியாகி ஷாஜகான் குடும்ப நிவாரண நிதியை முதல்வர் வழங்கி னார். அப்போது பேசிய அவர், போதைப் பொருள் மட்டுமல்ல, வகுப்புவாதத்திற்கும் நம்மிடையே இடமில்லை என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். தீபாவளியன்று மீன், இறைச்சி உண்பவர்களை வேட்டையாடவும், தாக்கவும் சங்பரிவார் ஆர்.எஸ்.எஸ் கும்பல் நாட்டின் பல பகுதிகளிலும் முயற்சித்து வரும் நிலையில், இதேகேரளாவில் போதையில்லா நாட்டிற்காக அனைவரும் இணைந்து தீபம் ஏற்றுகிறோம். இந்த சமூகத்தால் வகுப்புவாதத்தையும் விரட்டி யடிக்க முடியும். வகுப்புவாதம் தேசத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. நாட்டின் ஆட்சியாளர்கள் மதச் சார்பின்மையை ஒழிப்பதன் மூலம் வகுப்பு வாதத்தை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் முயற்சிக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, எந்த எல்லைக்கும் செல்ல ஒன்றிய அரசு தயாராக உள்ளது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பாஜக செயல்படுத்துகிறது.
ஆர்எஸ்எஸ் அனைத்து நிலைகளிலும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. நமது நாட்டை மதச்சார்பற்ற நாடாக மாற்ற நாம் முயற்சிக்கிறோம். அவர்கள் மத சிறுபான்மை யினரையும், கிறிஸ்தவ முஸ்லிம் குழுக்களை யும், கம்யூனிஸ்டுகளையும் நாட்டின் உள் எதிரி களாகப் பார்க்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸால் குருஜி என்று கருதப்படும் கோல்வால்கரும் இதைத்தான் பதிவு செய்திருக்கிறார். ஹிட்லரின் உள் எதிரிகளான யூதர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை அழித்தொழிக்கும் நடவ டிக்கைகளின் மாதிரியாக ஆர்.எஸ்.எஸ் செயல் பாடு உள்ளது. மத சிறுபான்மையினருக்கு எதி ரான அனைத்து கலவரங்களும் அதன் ஒரு பகுதியாகும். மதத்தின் அடிப்படையில் குடி யுரிமை வழங்கப்படும் என்று குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனால் சிறுபான்மை மதத்தினர் அச்சமடைந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பலவீனப் படுத்தும் நோக்கில் சங்பரிவார் சக்திகள் கொலைகளைச் செய்கின்றனர். கொலைக் கத்திக்கு கடைசியாக பலியானவர் ஷாஜகான் என்று சொல்ல முடியாது. எங்கள் தோழர்களைக் கொன்றால் கட்சி அழிந்துவிடும் என்று கணக் குப் போடுகிறார்கள். நம்மைவிட்டுப் பிரிந்தவர் களின் நினைவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும், கட்சியை மேலும் பலப்படுத்த வேண் டும் என்று முதல்வர் கூறினார்.