திருவனந்தபுரம், நவ.20- கேரள தொழில் கட்டமைப்பு வளர்ச்சி கழகம் (கின்ஃப்ரா) அம்மாநிலத்தின் தொழில் வளச்சியில் ஒரு வரலாற்று சாத னையை படைத்துள்ளது. கடந்த 5 ஆண்டு களின் சாதனையை ஒன்றரை ஆண்டுகளில் முறியடித்து 250 புதிய தொழில் முயற்சிகள் மூலம் ரூ.1,800 கோடி முதலீடு எட்டப்பட்டு உள்ளது. 23,000 வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன. இரண்டாவது பினராயி அரசு மீண்டும் பதவிக்கு வந்த பிறகு அக்டோ பர் வரையிலான சாதனை இது. முதல் பினராயி அரசின் ஆட்சிக் காலத் தில் 5 ஆண்டுகளில் ரூ.1731.53 கோடி முத லீட்டில் 540 தொழில்கள் துவக்கப்பட்டன. அந்த சாதனையை ஒன்றரை வருடத்தில் கின்ஃப்ரா முறியடித்தது. முந்தைய யுடிஎப் அரசாங்கத்தின் போது (2011--16), கின்ஃப்ரா 98,000 சதுர அடி நிலத்தை மட்டுமே வழங்கி யது. 4498 வேலை வாய்ப்புகள் உருவாக்கப் பட்டன என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் தற்போதைய எல்டிஎப் ஆட்சி யில், கின்ஃப்ரா நிறுவனம் ஒன்றரை ஆண்டு களில் 150.82 ஏக்கர் நிலத்தையும், 2,90,800 சதுர அடி கட்டப்பட்ட பகுதியையும் நிறுவனங்களுக் காக ஒதுக்கியுள்ளது.
இதில் டிசிஎஸ், டாடா அலெக்ஸி, வி-கார்டு, அகபீ டயாக்ன ஸ்டிக்ஸ், டிரான்ஸ் ஏசியன் ஷிப்பிங் கம்பெனி, ஹைகான், வின்விஷ், ஜோலி கோட்ஸ், டீன்ஸ் கன்ஸ்ரக்சன்ஸ் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்கள் இந்த கால கட்டத்தில் கின்ஃப்ரா தொழில் வளாகத் துக்கு வந்துள்ளன. கின்ஃப்ரா தலைமையில் செயல்படுத் தப்பட்டு வரும் கொச்சி-பெங்களூரு தொழில் வழித்தடம் முடிவடையும் போது, முத லீட்டில் பெரும் ஏற்றம் ஏற்படும். தற்போது 85 சதவிகித நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.13,000 கோடி முதலீடு வருவதுடன் 32,000 பேருக்கு நேரடி யாகவும் ஒரு லட்சம் மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும். கொச்சியில் அம்பலத் தில் உள்ள பெட்ரோ கெமிக்கல் பூங்கா 2024 இல் முழுமையாக நிறைவடையும். இதன் மூலம் 11,000 வேலை வாய்ப்புகளும், ரூ.10,000 கோடி முதலீடும் எதிர்பார்க்கப்படு கிறது.