states

img

ஆர்எஸ்எஸ் குண்டர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர் படுகொலை

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டரை ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கேரள மாநிலம் தலச்சேரியில் உள்ள நியூ மாஹே பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் நேற்று பணிக்குச் சென்று இன்று காலை வீடு திரும்பி உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த ஹரிதாஸை அவரது வீட்டு முன் சுற்றி வளைத்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி உள்ளார். இதைத்தடுக்க வந்த அவரது சகோதரரையும் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ஹரிதாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரது சகோதரர் தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கொலைக்கு ஆர்எஸ்எஸ் குண்டர்களே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.வி ஜெயராஜன் உள்ளிட்ட தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
ஹரிதாஸ் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.