ஆலப்புழா, மே 30- கேரளத்தின் வேம்பநாடு உப்பங்கழியில் (காயல்) படகு மூழ்கியது. படகில் இருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகில் தண்ணீர் வருவதைக் கண்டு, அருகில் இருந்த படகில் ஏறி மூவரும் தப்பினர். ஆலப்புழாவில் வேம்பநாடு, ராணி காயல் பகுதியில் ரிலாக்சிங் கேரளா என்ற படகு மூழ்கியது. படகின் அடிப்பகுதி உடைந்து படகுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இது அனஸ் என்பவருக்கு சொந்தமான படகு. படகின் பழமையே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். மணல் மேட்டில் அடிபட்டு அடிப்பகுதி அசைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.