states

img

பெரும்பான்மை மதவெறியை நிலை நிறுத்தவே சீரான சிவில் சட்டத்தை முன்னிறுத்துகிறது பாஜக

திருவனந்தபுரம், ஜூலை 1- கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  ஒரே மாதிரியான சிவில் சட்டம் குறித்த  விவாதங்கள் நாட்டின் பன்மைத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது; பெரும்  பான்மை ஆட்சியை நிறுவுகிறது என சந்  தேகிப்பவர்கள் மீது பாஜக அரசு குற்றம்  சாட்ட முடியாது. நாட்டில் பண்பாட்டு வேறு பாடுகள் நீக்கப்பட்டு, ‘ஒரு தேசம் ஒரு கலாச்சாரம்’ என்ற பெரும்பான்மை வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை செயல் படுத்தும் திட்டம்தான் ஒரேமாதிரியான சிவில் சட்டம் என்ற கோணத்தில் மட்டுமே பார்க்க முடியும்.  ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைத் திணிப்பதற்குப் பதிலாக, தனிப்பட்ட சட்  டங்களுக்குள் பாரபட்சமான நடைமுறை களை சீர்திருத்தவும் திருத்தவும் முயற்சி கள் மேற்கொள்ள வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு சமூகத்தின் ஆதரவு கட்டா யம் தேவை. அதுவும் கூட அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் விவாதங்கள் மூல மாகவே இருக்க வேண்டும்.  அனைத்து மதங்களிலும் சீர்திருத்த இயக்கங்கள் அவற்றிற்குள்ளேயே உரு வாகியுள்ளது. ஒரே மாதிரியான சிவில்  சட்டம் நிர்வாக முடிவு மூலம் தீர்வுகாணக் கூடிய பிரச்சனை அல்ல.  2018-ஆம் ஆண்டு சட்ட ஆணையம் நடத்திய கட்டத்தில் ஒரே மாதிரியான ‘சீரான சிவில் சட்டம்’ அவசியமில்லை; விரும்பத்தக்கது அல்ல என்று கருத்து  தெரிவித்தது. எப்படி திடீரென்று அந்த நிலை  யிலிருந்து மாறும் சூழ்நிலை ஏற்பட்டது என் பதை பாஜக முதலில் விளக்க வேண்டும்.  ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் இருந்து ஒன்றிய அரசும், சட்ட ஆணையமும் விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.