திருவனந்தபுரம், ஜுன் 16- முதல்வர் பினராயி விஜயனை விமானத்தில் வைத்து கொலை செய்ய முயன்ற வழக்கில் தலை மறைவாக உள்ள மூன்றாவது குற்ற வாளியான சுனித் நாராயணனை பிடிக்க காவல்துறையினர் வியாழ னன்று (ஜுன் 16) லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு எர்ணாகுளத்தில் கூடி ஆலோசனை நடத்தியது. இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறு வனத்திடம் இருந்து அன்றைய தினம் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் தகவல்களையும் அதி காரிகள் சேகரித்தனர். சதி உள்ளிட்ட வழக்குகள் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்பிரிவு எஸ்.பி.பிரஜீஷ் தோட்டத்துக்கு டிஜிபி உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பர்சீன் மஜீத் மற்றும் நவீன் குமார் ஆகியோரை காவலில் வைக்கக் கோரியும் விசார ணைக் குழு மனு தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சக பயணிகளிடம் புத னன்று சங்குமுகம் உதவி ஆணையர் வாக்குமூலம் பதிவு செய்தார். இத னிடையே அரசுத் தரப்பின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு ஜூடிசியல் முதல் வகுப்பு நடுவர் நீதிமன்றம் 2இல் இருந்து திருவனந்த புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத் துக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மற்றும் காவல் விண்ணப் பங்கள் முதன்மை அமர்வு நீதிமன்றத் தால் பரிசீலிக்கப்படும். முதலமைச் சரை விமானத்தில் வைத்து படு கொலை செய்யும் முயற்சி என அர சுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரி வித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலமைச்சருக்கு குறைந்த அளவி லான பாதுகாப்பு இடமாக விமான த்தை தேர்வு செய்ததாகவும் அரசுத் தரப்பு வாதிட்டது. முதல் குற்றவாளி 13 வழக்குகளில் குற்றவாளி என அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சரை குறிவைத்து வன்முறை இண்டிகோ அறிக்கை |
முதல்வரை குறிவைத்து விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் வன்முறை நடத்தியதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இண்டிகோ மேலாளர் காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு விரிவான அறிக்கை அளித்தார். முதல்வர் பினராயி விஜயன் விமானத்திற்குள் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்வர் சீட் பெல்ட்டை மாற்றிக் கொண்டிருந்த போது ஆக்ரோஷத்துடன் முதலமைச்சரை நோக்கி கும்பல் விரைந்தது. தரங்கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். விமான ஊழியர்கள் அவர்களிடம் உட்காருமாறு பலமுறை கேட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்களை பயணிகள் தடுக்க முயன்றும் பலனில்லை. விமான போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான பணியாளர்கள், விமானி மற்றும் கேப்டன் ஆகியோரின் வாக்குமூலங்களின் அடிப்படையில் மேலாளரின் அறிக்கை அமைந்துள்ளது. |