states

img

விடுதலைப் போராட்டத்தை வழி நடத்தியவர்களும் பின்வாங்கியவர்களும் ஒன்றல்ல.... கேரள முதல்வர்....

திருவனந்தபுரம்:
விடுதலைப் போராட்டத்தை வழிநடத்தியவர் களையும் அதிலிருந்து பின்வாங்கியவர்களையும் ஒன்றுபோல் மகிமைப்படுத்த யாரும் முயற்சிக்க கூடாது என்றும் கேரளாவிற்கு அந்த அணுகுமுறை இல்லை என்றும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.கண்ணூர் பல்கலைக்கழக பாடத்திட்ட விவாதம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வர் மேலும் கூறியதாவது: எந்தவொரு பிற்போக்கு யோசனையும் விமர்சன ரீதியாக ஆராயப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அதில் தவறேதும்இல்லை. இது தொடர்பாக பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாடத்தைப் படிக்கஇரண்டு பேர் கொண்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள் ளது. அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் உரியமுடிவை எடுப்பதாக துணைவேந்தர் தெளிவுபடுத்தியுள் ளார். எப்படியிருந்தாலும், இதுபோன்ற விசயங்களில் கேரளாவின் நிலைப்பாடு குறித்து யாருக்கும் குறிப்பிட்ட சந்தேகங்கள் அல்லது கவலைகள் இருக்காதுஎன்று நினைக்கிறேன் என்றார்.

;