திருவனந்தபுரம், பிப்.8- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தை செயல்படுத்துவதில் கேரளம் நாட்டிற்கு முன்னு தாரணமாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.பி.ராஜேஷ் கூறினார். கடந்த இரண்டு நிதி யாண்டுகளில் 10 கோடி வேலை நாட்கள் உருவாக் கப்பட்டுள் ளன. இது கொரோனா நெருக் கடியில் தத்தளித்த கிரா மப்புற மக்களுக்கு நிம்மதி யை அளித்துள்ளது. வேலை நாட்களின் தேசிய சராசரி 50. கேரளாவில் இது 64.41 ஆக உள்ளது. தேசிய அளவில் சராசரியாக 100 நாட்கள் வேலை செய்யும் குடும்பங்களின் எண் ணிக்கை 8 ஆகவும், கேரளா வில் 31 ஆகவும் உள்ளது. பட்டியலின குடும்பங்களின் வேலை கேரளாவில் 86.2 சத வீதமாக உள்ளது. அதே சம யம் தேசிய சராசரி 57.52 சத வீதமாக உள்ளது. பழங்குடி யின குடும்பங்களுக்கு கூடு தலாக 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் ஒரே மாநிலம் கேரளா. தொழி லாளர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். இது தேசிய அள வில் 55ஆக உள்ளது. மாநிலத்தில் 26.82 லட்சம் தொழிலாளர்கள் இத்திட் டத்தை நம்பி உள்ளனர். கேரளா 2022-23 இல் 10.32 கோடி வேலை நாட்கள் கோரி யது. ஆனால், 6 கோடி வேலை நாட்கள் ஒதுக்கப்பட் டது. தற்போது இது 8.5 கோடி யாக மாற்றியமைக்கப்பட் டுள்ளது. இதில் கேரளா 7.79 கோடி வேலை நாட்களை உருவாக்கியுள்ளது. 15.02 லட்சம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் பட்டது. தளவாடங்களுக் காக ரூ.263.64 கோடியும், நிர் வாக செலவீனமாக ரூ.152.72 கோடியும் ஒன்றிய அரசு தர வேண்டும். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான சம்பளத் தொகையும் இது வரை கிடைக்கப் பெற வில்லை என அமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.