திருவனந்தபுரம், அக்.3- புற்றுநோயால் பாதிக்கப் பட்ட அவர் ஆச்சரியப்படும் அள வுக்கு அசாதாரணமாக நோய்க்கு எதிரான போராட்டத்தை நடத்தி னார் என கோடியேரி பாலகிருஷ் ணனுக்கு சிகிச்சை அளித்த மருத் துவர் போபன் தாமஸ் தெரிவித்துள்ளார். கோடியேரியின் 2 வருட சிகிச்சைக்கு முற்றிலும் பொறுப் பாக இருந்தவர்தான் மருத்துவர் போபன். ‘ஒவ்வொரு கீமோ சிகிச் சைக்குப் பிறகும், அவர் வழக்க மான செயல்பாடுகளுக்கும் கூட் டங்களுக்கும் செல்வார். அவர் சந்திப்புகள் மற்றும் கூட்டங்களின் அடிப்படையில் தேவைக்கேற்ப கீமோ தேதிகளை மாற்றிய மைத்துள்ளார். எல்லா சூழ்நிலை களிலும் அவர் ஒரு சாதாரண புற்று நோயாளியை விட தைரியமாக இருந்தார். கடந்த டிசம்பரில் எனது புற்று நோய் பற்றிய “அறிவுக்கு அப் பால்” புத்தகத்தை வெளியிட்டார். அதே நாளில் காலையில் கீமோ எடுத்து மாலையில் விழாவிற்கு வந்தார். மனித களைப்பை கூட ஒதுக்கி வைத்து பொது மன்றங்க ளில் தோன்றியவர்’ என டாக்டர் போபன் தனது நினைவைப் பகிர்ந்து கொண்டார். இறுதி கட்டத்தில் சிகிச்சைக் காக சென்னைக்கு கொண்டு செல்லவும் அதற்கான ஏர் ஆம்பு லன்ஸில் அதற்கான ஏற்பாடு செய் வதிலும் போபன் முன்னிலை வகித் தார். கோட்டயத்திலும் திரு வனந்தபுரத்திலும் போபன் பணி யாற்றுகையில், கோடியேரியின் சிகிச்சையில் பங்கேற்கத் துவங் கினார். அமெரிக்க மருத்துவமனை யின் ஆலோசனைக்கு ஏற்ப, போபன் சிகிச்சை அளித்து வந் தார். சென்னை செல்லும் முன்பு நிலைமை மோசமடைந்தபோதும் கோடியேரி வெளிப்படுத்திய அசாதாரணமான தைரியம் ஆச்ச ரியப்பட வைத்ததாகவும் போபன் தெரிவித்துள்ளார்.