states

img

காதலனுக்கு விஷம் கொடுத்து கொன்ற தோழி விசாரணையின்போது தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம், அக்.31- தமிழக கேரள எல்லை அருகே கேர ளத்தின் பாறசாலையைச் சேர்ந்த பிஎஸ்சி மாணவர் ஷரோன் ராஜ்-க்கு அவரது தோழி கிரீஷ்மா விஷம் கொடுத்தது அம்ப லமானது. விசாரணையின்போது கழி வறைக்கு சென்றவர் அங்கிருந்த திரவத்தை குடித்ததால் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். எனினும் அவர் கைது அங்கேயே செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் எல்லையில் உள்ள களியக்காவிளை பழுகல் ராமவர்மன் சிராவைச் சேர்ந்தவர் கிரீஷ்மா. இவர் அருகில் உள்ள கேரளத்தின் பாறசாலை யைச் சேர்ந்த ஷரோன் ராஜை காதலித்து வந்துள்ளார். இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி இறுதி ஆண்டு படித்து வந்தார். இரு வரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இந்நிலையில் கிரிஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு நடந்துள் ளது. குடும்பத்தினர் ஏற்பாடு செய்த திரு மணத்திற்கு கிரீஷ்மாவும் உடன் பட்டுள்ளார். இந்நிலையில் ஷரோனை கைவிட முடிவு செய்தவர் ஷரோனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வீடியோ பதிவுகளை அழித்துவிடுமாறு கேட்டுள்ளார். இதற்கு உடன்படாத ஷரோனை கொலை செய்ய கிரீஷ்மா அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து திட்ட மிட்டுள்ளார். அதன்படி கடந்த அக்டோபர் 14 ஆம்  தேதி தனது வீட்டுக்கு ஷரோனை அழைத்த வர் விஷம் கலந்த கஷாயத்தை குடிக்க கொடுத்துள்ளார். குமட்டல் வருவதாக கூறியதும் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன் பிறகு வாந்தி எடுத்தவரை அவரது நண்பர் பாறசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மறுநாள் பாறசாலை மருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். படிப்படியாக உடலின் உள்ளுறுப்புகள் செயலிழந்தது. 25 ஆம் தேதி ஷரோன் உயிரிழந்தார். முன்னதாக பாறசாலை ஷரோன் ராஜ், தன் காதலியை காட்டிக்கொடுக்க விருப்பாதவராக காவல் துறையினரிடம் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். ஷரோன் மரணத்தில் அவரது தந்தை ஜெயராஜ் சந்தேகம் தெரிவித்து புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏடிஜிபி எம்.ஆர்.அஜித்குமார், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் டி.ஷில்பா, ஏஎஸ்பி சுல்பிகர், விசாரணை அதிகாரி கே.ஜே.ஜான்சன் ஆகியோரிடம் கொலைக்கான தடயங்கள் கிடைத்தன. உடற்கூராய்வு அறிக்கை தொடர்பாக மருத்துவர் அளித்த வாக்கு மூலத்தில் காப்பர் சல்பேட் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து சந்தேகம் வலுத்தது. இதையடுத்து, கிரீஷ்மா, அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர் ஆகியோர் ரூரல் எஸ்பி அலு வலகத்துக்கு ஞாயிறன்று (அக்.30) வரவ ழைக்கப்பட்டனர். அங்கு நடந்த விசார ணையில் குற்றத்தை கிரீஷ்மா ஒப்புக் கொண்டார். கிரீஷ்மாவின் தொலைபேசியின் இணைய தேடலை ஆய்வு செய்தபோது காப்பர் சல்பேட் பற்றிய தகவலை காவல் துறையினர் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான விசாரணையில் கிரீஷ்மா குற்றத்தை ஒப்புக் கொண்டார். முதல் கணவர் இறந்துவிடுவார் என்கிற ஜோதிடத்தை கிரீஷ்மாவும் அவரது குடும்பத்தினரும் நம்பினர் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்கொலை முயற்சி
திங்களன்று காலை கிரீஷ்மாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கழிவறைக்கு செல்ல வேண்டும் என கூறியதால் பெண் காவலர் கள் இருவர் அவரை அழைத்துச் சென்ற னர். திரும்பி வந்தவர் வாந்தி எடுத்ததை அடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். காவல் நிலையத்தின் கழிவறையில் அவர் கிருமி நாசினி குடித்திருக்கலாம் என சந்தேகிக் கப்படுகிறது.  எனினும் அவருக்கு ஆபத்து இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்து கிரீஷ்மாவின் வாக்குமூலத்தை வஞ்சியூர் மாஜிஸ்திரேட் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து கிரீஷ்மா கைது செய்யப் பட்டார். எனினும் அவர் 24 மணி நேரம் மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப் பட்டுள்ளார்.