கோழிக்கோடு கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 30 அன்று அதிகாலை பயங்கர நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரி வில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக் கை 323ஆக உயர்ந்துள்ள நிலை யில், காணாமல் போன 206 பேரை தேடும் பணி 4ஆவது நாளாக தொ டர்ந்து நடைபெற்று வருகிறது
இந்நிலையில், வியாழனன்று இரவு ராணுவம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது யாதெனில்,”நிலச்சரிவில் சிக்கி உயிருடன் இருக்கும் நபர்களை மீட்கும் பணி நிறைவடைந்து விட்டது. இனி யாரும் அங்கு உயி ரோடு இருக்க வாய்ப்பில்லை. சட லங்களை தேடும் பணி மட்டுமே நடைபெறும்” என ராணுவம் அறிவித் தது. இதனை கேரள முதல்வர் பின ராயி விஜயனும் தனது பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கதறி அழும் உறவினர்கள்
வயநாடு நிலச்சரிவில் சிக்கி இன்னும் 200-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்கள் வேறு எங்காவது உயிரோடு சிக்கி இருக்கலாம், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு எங்காவது உயி ரோடு இருக்கலாம் என காணாமல் போன உறவினர்களின் குடும்பத்தி னர் நம்பிக்கையுடன் நிவாரண முகாம்களில் உள்ளனர்.
வியாழனன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண முகாம்களில்,”நிலச்சரிவில் உயிர் பிழைத்து முகாம்களில் உள்ள வர்கள் அனைவரும் பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ் வேறு முகாம்களில் இருக்கக் கூடும். முகாம்களில் இருப்ப வர்கள், தங்களது குடும்பத்தின ரை காணவில்லை என தேடிப்போக வேண்டாம். பட்டியல் தாருங்கள். நாங்கள் கண்டுபிடித்து தருகி றோம்” என ஆறுதல் அளிக்கும் விதத்தில் கூறினார்.
ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் ராணுவம்,”உயிருடன் இருக்கும் நபர்களை மீட்கும் பணி நிறைவடைந்து விட்டது” எனக் கூறியுள்ளது தான் முண்டக்கை, சூரல்மலை கிராம வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் காணாமல் போன உற வினர்களின் குடும்பத்தினர் நிவா ரண முகாம்களில் கதறி அழுது வரு கின்றனர்.
40 கிமீ பரப்பளவில் தேடுதல் வேட்டை
வயநாடு நிலச்சரிவில் சிக்கிய நபர்கள் மற்றும் சடலங்கள் சாலி ஆற்றில் இருந்தே அதிகம் மீட்கப் பட்டன. இதனால் காணாமல் போன தாக கூறப்படும் நபர்கள் சாலியாறு கரையோரப் பகுதிகளில் இருக்க லாம் என கேரள காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால் சாலி யாற்றின் 40 கிமீ தொலைவில் உள்ள 8 காவல் நிலைய எல்லைகளுக்குள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. ராணுவத்தின் மெட் ராஸ் ரெஜிமென்ட்டின் பொறியியல் துறை வியாழனன்று மாலை சூரல் மலையில் 190 அடி நீளமுள்ள பெய்லி பாலத்தை கட்டுமானப் பணிகளை நிறைவடைந்த நிலையில், இனி மீட்புப் பணி விரைவாக நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.
முகாமில் 2,328 பேர்
மேப்பாடி, சூரல்மலையில் தற் காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 9 நிவாரண முகாம்களில் 578 குடும் பங்களைச் சேர்ந்த 2,328 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 859 ஆண்கள், 903 பெண்கள், 564 குழந்தைகள் மற்றும் 2 கர்ப்பிணி பெண்கள் முகாம் களில் வசித்து வருகின்றனர். நிவாரண முகாம்களுக்கு தேவையான அத்தி யாவசியப் பொருட்களை சம்மந்தப் பட்ட துறையினர் உறுதி செய்து வருகின்றனர்.
தாய்ப்பால் தானம் அளிக்க வயநாடு நோக்கி புறப்படும் தாய்மார்கள்
வயநாடு நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் அளிக்க வயநாடு நோக்கி கேரளாவின் இதர மாவட்டங்க ளில் இருந்து தங்கள் குழந்தைகளுடன் தாய்மார்கள் படையெடுத்து வருகின்றனர்.
பாவனாவிற்கு குவியும் பாராட்டு
இடுக்கி மாவட்டத்தின் உப்புதரை பகுதியைச் சேர்ந்தவர் சஜின் (35) விவசாயி யான இவரது மனைவி பாவனா (30). பாவனா தனது கணவரின் ஒப்புதலோடு, ”வயநாட்டில் தாயை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வேண்டும் என்றால், இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்” என தனது செல்போன் எண்ணை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதைப் பார்த்து வயநாட்டில் உள்ள முகாமில் இருந்து பாவ னாவிற்கு அழைப்பு வந்தது. இதையடுத்து கணவர் மற்றும் குழந்தைக ளுடன் புதனன்று இரவு வயநாடு முகாமிற்கு சென்ற பாவனா, அங்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்து வருகிறார். பாவனாவின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பல பெண்கள், தாயில்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வயநாடு நோக்கி புறப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சடலத்தில் அரசியல் ஆதாயம் ;
“ராம நாமம்” போட்டு அடக்கமாம்
மீட்புப்பணி செய்வது போல வயநாட்டில் ஷூட்டிங் நடத்தும் ஆர்எஸ்எஸ்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி பகுதிகளில் கேரள காவல்துறை, தீயணைப்புத் துறை, மாநில மற்றும் தேசிய மீட்புப் படையினர், ராணுவத்தினர், சிபிஎம் ஊழியர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மத நல்லிணக்க அமைப்புகள், செஞ்சிலுவை சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்க ளைச் சேர்ந்த தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பினர் நேரடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். மேற்குறிப்பிட்டவர்களில் ராணுவத்தின ருக்கு உதவியாகவும், ராணுவம் இல்லாத இடங்களில் மாவட்ட நிர்வாகத்துடன் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் ஷூட்டிங்...
ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், நாங்களும் வயநாடு நிலச்சரிவு களத்தில் இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக, நிலச்சரிவு ஏற்படாத இடத்தில் மீட்புப் பணி மேற்கொண்டு வருகின்றனர். அதாவது நிலச்சரிவால் பாதிக்கப்படாத இடங்களில் “காவி டவுசருடன்” கடப்பாரை, மண்வெட்டியை கொண்டு வெறுமனே மண்ணை தோண்டி அதனை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் “வயநாடு நிலச் சரிவில் ஆர்எஸ்எஸ்” என பதிவிட்டு வருகின்றனர். இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பில் 250க்கும் மேற் பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவதாக ஆர்எஸ்எஸ் கூறி வருகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் வெளியிடும் புகைப்படங்களில் 15 பேர் மட்டுமே அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.
சடலங்களுக்கு “ராம நாமம்”
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்களை மாவட்ட நிர்வாகமே அடக்கம் செய்து வருகிறது. ஆனால் ஆர்எஸ்எஸ்,” நாங்கள் 45 உடல்களை அடக்கம் செய்துள்ளோம். சடலத்தில் “ராம நாமம்” போட்டு அடக்கம் செய்யப்படுகிறது” எனக் கூறி பொய்களை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. சடலத்தில் கூட மதவெறியுடன் ஆதாயம் தேடி வரும் பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்களின் நடவடிக்கைகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.