ஏப். 21 துவங்கி மே 24 வரை ‘எனது கேரளம்’ கொண்டாட்டம்!
பினராயி 2-ஆவது ஆட்சியின் நான்காம் ஆண்டு நிறைவு]
காசர்கோடு, ஏப்.21- இரண்டாவது பினராயி விஜயன் அரசின் நான்காம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம் கேரளத்தில் திங்களன்று (ஏப். 21) துவங்கியது. இந்த கொண்டாட்டத்தையும், ‘எனது கேரளம்’ சந்தைப்படுத்தல் கண்காட்சியையும் முதலமைச்சர் பினராயி விஜயன் காசர்கோட்டில் உள்ள காளிக்கடவில் திங்களன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “கேரள மக்கள் ஒட்டுமொத்தமாக வருந்திக் கொண்டிருந்த ஒரு கால கட்டத்தை, இடது ஜனநாயக முன் னணி ஆட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. எனினும், நாட்டின் இதர பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி கேரளத்துக்கு தேவை” என்றார். “மக்களால் தங்களிடம் ஒப்ப டைக்கப்பட்ட பணியை நிறைவேற் றத் தொடங்கியபோது, பல நெருக்க டிகள் எழுந்தன. அவற்றில், இய ற்கை பேரழிவுகள், தொற்றுநோய் கள் பெரும் சவால்களாக அமைந் தன” என்பதையும் தெளிவுபடுத்திய முதலமைச்சர் பினராவி விஜயன், அவை அனைத்தையும் முறியடித் துத் தான் கேரளத்தை இடது ஜன நாயக முன்னணி அரசு, வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது” என்று குறிப் பிட்டார். விழாவிற்கு வருவாய்த்துறை அமைச்சர் கே. ராஜன் தலைமை வகித்தார். நிதி அமைச்சர் கே.என். பாலகோபால், அமைச்சர்கள் கே. கிருஷ்ணன் குட்டி, ஏ.கே. சசீந்தி ரன், ராமச்சந்திரன் கடனப்பள்ளி, அப்துரஹ்மான், சட்டமன்ற உறுப்பி னர்கள் இ. சந்திரசேகரன், சி.எச். குஞ்சம்பு, எம். ராஜகோபாலன், தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘எனது கேரளம்’ கொண்டாட் டங்கள் ஏப்ரல் 21 முதல் 27 வரை காசர்கோடு, ஏப்ரல் 22 முதல் 28 வரை வயநாடு மாவட்டத்தில் நடை பெறும். இதேபோல் கோட்டயம் மாவட் டத்தில் ஏப்ரல் 24 முதல் 30 வரை யும், இடுக்கி மாவட்டத்தில் ஏப்ரல் 29 முதல் மே 5 வரையும், கோழிக் கோடு மாவட்டத்தில் மே 3 முதல் 12 வரையும், பாலக்காடு மாவட்டத் தில் மே 4 முதல் 10 வரையும், ஆலப் புழா மாவட்டத்தில் மே 6 முதல் 12 வரையும், மலப்புரம் மாவட்டத்தில் மே 7 முதல் 13 வரையும், கண் ணூர் மாவட்டத்தில் மே 8 முதல் 14 வரையும், கொல்லம் மாவட்டத் தில் மே 11 முதல் 17 வரையும், பத்த னம்திட்டா மாவட்டத்தில் மே 16 முதல் 22 வரையும், எர்ணாகுளம் மாவட்டத்தில் மே 17 முதல் 23 வரையும், திருவனந்தபுரம் மாவட் டத்தில் மே 17 முதல் 23 வரையும், திருச்சூர் மாவட்டத்தில் மே 18 முதல் 24 வரை கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இவ்விழாக்க ளில் அமைச்சர்கள், மக்கள் பிரதி நிதிகள் பங்கேற்கின்றனர்.