அகமதாபாத், பிப். 15 - காவல்நிலைய மரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.பூலோ தேவி நேதம் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கம் அளித்தார். நேரடியாக அளிக்கப்பட்ட இந்த விளக்கத்தின் பின் வெளி யான அறிக்கையில்,”கடந்த 5 ஆண்டுகளில் (2017- 2022) அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காவல்நிலைய விசாரணையில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 669 எனவும், போலீஸ் காவலில் இறந்த 201 பேரின் குடும்பங்களுக்கு ரூ.5.8 கோடி (தேசிய மனித உரிமை கள் ஆணையம் அளித்த தகவலை மேற்கோள் காட்டி) இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு வழக்கில் ஒழுங்கு நடவடிக்கை யும் எடுக்கப்பட்டதாகவும்” அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் முக்கிய அம்சம் என்னவென்றால், கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த காவல்நிலைய மரண எண் ணிக்கையின் முதல் 3 இடங்களில் பாஜக ஆளும் மாநி லங்கள் தான் உள்ளன. முதலிடத்தில் உள்ள பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் 80 பேரும், அதற்கு அடுத்தபடியாக பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் 76 பேரும், 3-வது இடத்தில் பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் 41 பேரும் காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு (40), பீகார் (38) ஆகிய மாநிலங்கள் அடுத்த 2 இடங்களில் உள்ளன.