காங்கிரஸ் மூத்த தலைவர் சக்திசிங் கோஹில் பேட்டி
அகமதாபாத், நவ. 16 - குஜராத் சட்டப்பேரவைக்கான வேட்பா ளர் பட்டியலை அறிவித்த நாளிலிருந்தே பாஜக-வுக்கு பிரச்சனை ஆரம்பித்து விட்டதாகவும், அதிருப்தி தலைவர்கள் பலர் வெளிப்படையாக பாஜக-வை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சக்தி சிங் கோஹில் கூறியுள்ளார். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, 167 வேட்பாளர்களின் பெயர்களை அறி வித்துள்ள பாஜக, அதில், 69 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி உள்ளது. 38 எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பு தரவில்லை. வாய்ப்பு அளித்துள்ள 69 எம்எல்ஏ-க்களிலும் 17 பேர், கடந்த 10 ஆண்டுகளில் வேறு கட்சிகளிலிருந்து விலகி பாஜக-வில் இணைந்தவர்கள். குறிப் பாக காங்கிரசில் இருந்து பாஜக-வுக்குத் தாவிய ஹர்திக் படேல், பாகாபாய் பரத் உள்ளிட்ட பலருக்கு அக்கட்சி வாய்ப்பு அளித்து உள்ளது. காங்கிரசிலிருந்து விலகிய மோகன் சிங் ரத்வாவின் மகன் ராஜேந்திர சிங் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இது மூத்த பாஜக தலைவர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாஜக-வை கடுமையாக விமர்சித்து வரும் அவர்கள், சுயேச்சையாக போட்டியிடவும் திட்டமிட்டு வருகின்றனர். இதனையே பாஜக-வுக்கு கெட்ட சகுனம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சக்தி சிங் கோஹில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கோஹில், மேலும் கூறியிருப்பதாவது: “தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட பாஜக தலைவர்கள் வெளிப் படையாகவே பாஜக-வை விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதுபோன்றவை அரி தாகவே நடக்கும் நிகழ்வுகள். அதேநேரம் முற்றிலும் எதிர்பார்க்க முடியாதவை என்று சொல்ல முடியாது. பாஜக-வைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் கள் பொறுப்பு, ஊழல் குற்றச்சாட்டுகளின் சுமைகளை உணர்கிறார்கள். மறுபக்கம் பாஜக மேலிடம் காங்கிரசிலிருந்து கட்சித் தாவியவர்களை வேட்பாளர்களாக திணித்து உள்ளது. இதன் காரணமாக பாஜக தலைவர்கள் மத்தியில் அதிகளவிலான கோபமும், விரக்தியும் ஏற்பட்டு இருக்கிறது. இது பாஜக தலைமைக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஜனநாயகமான, வெளிப்படையான கட்சியாகும். எம்எல்ஏ சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடைக்கா மல் ஏமாற்றத்தில் உள்ளவர்கள் அதிருப்தி யை வெளிப்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியில் வழி இருக்கிறது. ஆனால், முழுக்க முழுக்க மையப்படுத்தப்பட்ட, வெளிப்படை தன்மை இல்லாத பாஜகவில் முன் எப்போ தும் இல்லாத வகையில் இதுபோன்ற கிளர்ச்சிகள் ஏற்பட்டு உள்ளன.” இவ்வாறு சக்தி சிங் கோஹில் தெரிவித்துள்ளார்.