அகமதாபாத், நவ.15- மோர்பி நகரில் ஓடும் மச்சூ ஆற்றின் குறுக்கே, 1879-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொங்குபாலம் அமைக் கப்பட்டது. 1.25 மீட்டர் அகலமும், 233 மீட்டர் நீளமும் கொண்ட இந்த பாலம் சிறந்த சுற்றுலாத் தலமாக இருந்து வந்தது. இந்த பாலம் அமைக்கப்பட்டு 143 ஆண்டுகள் ஆகிவிட்ட தால், அதனை சீரமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான காண்ட்ராக்ட், அஜந்தா கடிகார நிறு வனத்தின் மற்றொரு நிறுவனமான ‘ஒரேவா குழுமம்’ வசம் வழங்கப்பட்டது. அந்த நிறுவன மும் கடந்த 6 மாதங்களாக புனரமைப்புப் பணியை மேற்கொண்டு, கடந்த அக்டோபர் 26- குஜராத்தி நாளன்று மோர்பி தொங்கு பாலத்தை பயன்பாட்டிற்குத் திறந்துவிட்டது. இந்நிலையில், கடந்த அக்டோபர் 30 அன்று இந்தப் பாலம் அறுந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதில், 135 பேர் மச்சூ ஆற்றில் மூழ்கி பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக ஒரேவா குழுமத்தின் 2 மேலாளர்கள், 2 துணை ஒப்பந்ததாரர்கள், டிக்கெட் புக்கிங் செய்த கிளார்க், பாதுகாவலர் என 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மோர்பி பால வழக்கு, குஜராத் உயர் நீதிமன்றத்தில் செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி அரவிந்த் குமார், நீதிபதி அசுதோஷ் ஜே சாஸ்திரி அமர்வு வழக்கை விசாரித்தது. ஆனால், இந்த விசாரணையின்போது, மோர்பி நகராட்சி அதிகாரிகள் யாரும் ஆஜராக வில்லை. இது, தலைமை நீதிபதி அரவிந்த் குமார் அமர்வை கடும் அதிருப்திக்கு உள்ளாக்கி யது. “135 பேர் பலியான விஷயத்தில், நோட்டீஸ் அனுப்பியும் கூட விசாரணைக்கு நகராட்சி அதி காரிகள் யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர்கள் புத்திசாலித்தனமாக இதில் இருந்து தப்பிக்க முயல்கிறார்களா?” என்று தலைமை நீதிபதி அரவிந்த் குமார் கேள்வி எழுப்பினார். மேலும் பல அடுக்கடுக்கான கேள்விகளையும் அவர் முன்வைத்தார். “டெண்டர் எதுவும் விடாமலேயே குறிப்பிட்ட நிறுவனத்திற்கு காண்ட்ராக்ட் ஒதுக்கியதாக தெரி கிறது.
பாலம் பழுதுபார்க்கும் பணிக்கு ஏன் டெண்டர் விடுக்கவில்லை? ஏன் எந்த நிறு வனத்தையும் அழைக்கவில்லை. குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட- அந்த முக்கி யத்துவம் வாய்ந்த ஒப்பந்தமும் வெறும் ஒன்ற ரைப் பக்கம்தான் இருக்கிறது. டெண்டர் கூட விடுக்காமல் எவ்வாறு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது. புனரமைப்பிற்குப் பின் பாலம் மீண்டும் திறக்கப்படும் போது, அதன் தரத்தைச் சரி பார்க்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் எதா வது இருக்கிறதா? இதற்கு யார் பொறுப்பு? இந்த ஒப்பந்தமானது தொங்கு பாலத்தை இயக்கு வது, பராமரிப்பது, நிர்வகிப்பது பற்றியது. ஆனால் இந்த ஒப்பந்தம் ஜூன் 15, 2017-இல் முடிந்துவிட்டது. எனவே, அதன் பிறகு பாலத்தின் தரத்தைச் சான்றளிக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது. 2017-இல் காலம் முடிந்த பிறகு, மோர்பி பாலத்தின் பராமரிப்பு பணிகள் தொடர்பாக புதிய டெண்டரை விட மாநகராட்சி யும் ஆட்சியரும் எடுத்த நடவடிக்கை என்ன? தற்போது விபத்து நடந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்பட வில்லை? என்று கேள்விகளை முன்வைத் துள்ள குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு குஜ ராத் அரசின் 6 துறைகளுக்கு உத்தரவு பிறப் பித்துள்ளார்.