பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தின் முக்கிய நகரான வதோ தரா அருகே வாகோடியாவில் உள்ள நியூ சன்ரைஸ் பள்ளி. இந்த பள்ளியைச் சேர்ந்த 24 பள்ளி மாணவர்கள், 4 ஆசி ரியர்கள் அப்பகுதியின் முக்கிய சுற்றுலாத் தலமான ஹர்ணி ஏரிக்கு வியாழ னன்று சென்றனர். 28 பேரும் ஒரே படகில் ஏரியை சுற்றிப் பார்த்துக் கொண்டி ருந்த பொழுது, எதிர்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 மாணவர்கள் ( 7 பேர் மாணவிகள், 5 பேர் மாணவர்கள்), 2 ஆசிரியர்கள் என 14 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அலட்சியம் ஹர்ணி ஏரியின் படகு குழாம் தனி யார் நிறுவனமான “கோடியா திட்டம்” என்ற நிறுவனத்திடம் உள்ளது. லாப நோக்கத்திற்காக 14 பேர் மட்டுமே பய ணிக்க வேண்டிய படகில் 28 பேரை பயணிக்க வைத்துள்ளது கோடியா நிறு வனம். மேலும் படகில் பயணம் செய்த மாணவர்கள் உட்பட யாருக்கும் பாது காப்பு உபகரணமான லைப் ஜாக்கெட் வழங்கப்படவில்லை எனவும் குற்றச் சாட்டு எழுந்துள்ள நிலையில், படகு சவா ரியை நடத்தும் மேலாளர், ஊழியர்கள் உள்பட 18 பேர் மீது ஹர்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.