states

img

குஜராத் மீட்புப் பணியில் கடலில் விழுந்த ஹெலிகாப்டர்! ஒருவர் மீட்பு; 3 பேரைத் தேடும் பணி தீவிரம்

அகமதாபாத், செப். 3 - இந்தியக் கடலோரக் காவற்படை யின் ‘ஏஎல்எச்’ வகை ஹெலிகாப்டர் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில், இந்திய கட லோரக் காவற்படை வீரர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய 3 பேர்  காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

குஜராத் மாநிலம், போர்பந்தர் கடற்கரையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் இந்திய தேசியக்கொடி யுடன் கூடிய மோட்டார் டேங்கர் ஹரிலீலா கப்பல் நின்றது. இந்த ஹரி லீலா கப்பலில் இருக்கும் பணியாளர் ஒருவர் காயமடைந்த நிலையில், அவ ருக்கு அவசர மருத்துவ உதவிக்காக கடற்படையிடம் உதவி கோரப்பட்டது.

இதையடுத்து, இந்திய கடற்படை சார்பில் ‘ஏஎல்எச்’ எனும் மேம்படுத்தப் பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (Advanced Light Helicopter - ALH) அனுப்பி  வைக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்ட ரில் மொத்தம் 4 பேர் பயணித்தனர். இரவு 11 மணியளவில் ஹெலிகாப்டர் அவசர மாக அரபிக்கடலில் தரையிறக்கப் பட்டது. அப்போது எதிர்பாராத வித மாக ஹெலிகாப்டர் தண்ணீரில் விழுந் தது. இதில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேரும் மாயமாகினர்.

உடனடியாக 2 விமானங்கள், 4  கப்பல்கள் மூலம் மீட்புப் பணி மேற் கொள்ளப்பட்ட நிலையில், ஒருவர் மீட்கப்பட்டார். 3 பேர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி என்பது தீவிர மாக நடந்து வருகிறது.

விபத்திற்கு உள்ளான இந்திய கடற்படைக்கு சொந்தமான மேம் படுத்தப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் குஜராத்தில் சமீபத்தில் ஏற்பட்ட புயலின்போது 67 பேரை உயிருடன் மீட்டதில் முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.