குஜராத்தில் இருவேறு சாலை விபத்துகளில் 4 பேர் பலியாகியுள்ளதாக போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
குஜராத்தில் லிம்ப்டி மற்றும் சுரேந்திரநகர் இடையே மாநில நெடுஞ்சாலையில் நானா கேரளா கிராமத்திற்கு அருகே இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று பின்னால் இருந்து ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகன் காயமடைந்தனர் என்று சோட்டிலா காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து வித்தலபாரா என்ற இடத்தில் மினி லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையோரம் நடந்து சென்ற 2 பெண்கள் மீது மோதியது. அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மினி லாரியை ஓட்டிவந்த ஓட்டுனரும் உயிரிழந்ததாக லக்பத் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.