states

img

குற்றவாளிகள் 26 பேரும் விடுதலை : குஜராத் நீதிமன்றம் அநீதி!

அகமதாபாத், ஏப். 3 - குஜராத் இனப்படுகொலையின் போது, அங்குள்ள கலோல், டிலோஸ் பகுதிகளில் 17 முஸ்லிம் பெண்கள் கும்ப லாக வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேரையும் நீதி மன்றம் விடுதலை செய்துள்ளது. குஜராத்தில், 2002-ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரங்களால் அரங்கேற்றப்பட்ட மதவெறியாட்டம் - இனப்படுகொலையையொட்டி  ஏராள மான வழக்குகள் பதிவு செய்யப்பட் டன. பாஜக அரசு ஒன்றிய ஆட்சியதி காரத்திற்கு வந்தபின், அவற்றில் பல  வழக்குகள் நீர்த்துப் போகச் செய்யப் பட்டன. குற்றவாளிகள் அடுத்தடுத்து விடு தலை செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில், குல்பர்கா சொசைட்டி  வழக்கு, பில்கிஸ் பானு கும்பல் வல்லு றவு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்கு களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட னர். கடைசியாக 2023 ஜனவரி 25 அன்று, குஜராத் மாநிலம் திலோல் கிராமத்தில் 2 குழந்தைகள் உட்பட 17 முஸ்லிம்களை படுகொலை செய்து எரித்த வழக்கிலும் 22 பேரை, குஜராத்தின் பஞ்ச்மஹால் மாவட்ட ஹலோல் நகர நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த வரிசையில், குஜராத்தின் கலோல், டிலோஸ் பகுதிகளில் 17 முஸ்லிம் பெண்கள், கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 2002 மார்ச் 2-ஆம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.  மொத்தம் 194 சாட்சிகள் விசாரிக்கப் பட்டனர். 334 ஆவணங்கள் ஆதாரங் களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி லீலாபாய் சுதாசமா, ``குற்றம் சாட்டப்பட்ட 26 பேர் மீதான கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறைகள் ஆகியவற்றுக்கு எதிரான ஆவணங்கள் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை’’ என கூறி குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் மொத்தம் 39 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அவர் களில்  13 பேர் வழக்கு விசாரணையின் போதே மரணம் அடைந்து விட்டனர். எஞ்சிய 26 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.