குஜராத் மாநிலம் மோர்பி தொங்குபால பராமரிப்பில் பாஜக அரசு ஊழல்?
குஜராத்தில் 142 பேரின் உயிர்கள் பறிபோன துயரம்!
பொறியியலின் அதிசயமென அழைக்கப்பட்ட மோர்பி தொங்குபாலம்
குஜராத் மாநிலம் மச்சூ ஆற்றின் மீது தற்போது அறுந்து விழுந்த தொங்கு பாலம், 143 ஆண்டு களுக்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவில் மோர்பியை ஆண்ட சர் வாகிஜி தாகூர் என்பவரால் கட்டப்பட்டதா கும். நவீன ஐரோப்பிய கட்டிடக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருந்த சர் வாகிஜி தாகூர், அதே பாணியிலான பாலத்தை கட்டி எழுப்பினார். முழுக்க முழுக்க இங்கி லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பொருட்களைக் கொண்டும், கலை மற்றும் தொழில்நுட்பத்தின் அதிசய மாக இந்தப் பாலம் திகழ வேண்டும் என்ற நோக்கிலும் வாகிஜி தாகூர், ‘தர்பார்கத் அரண்மனை மற்றும் நாஸர் பாக் அரண்மனை’ ஆகியவற்றுக்கு இடையில் இதனைக் கட்டினார். தற்போது தர்பார்கத் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரிக்கு இடையில் இந்த பாலம் அமைந்துள்ளது. இது பொறியியலின் அதிசயம் என்றும் பேசப்பட்டு வந்தது.
143 ஆண்டுகளுக்கு முன்பே 3.5 லட்சம் ரூபாய் செலவு
150 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த பாலம் 3.5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதனை 1879ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி அப்போ தைய மும்பை ஆளுநர் ரிச்சர்ட் டெம்பிள் திறந்து வைத் தார். 233 மீட்டர் நீளமும், 1.25 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலம், முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வந்தது. 2001-ல் நிகழ்ந்த குஜராத் நிலநடுக்கத்தின் போது பாலம் பலத்த சேதமடைந்தது. அதன்பிறகு சீரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. 2022 மார்ச்சில் பராம ரிப்புப் பணி காரணமாக மூடப்பட்ட இந்தப் பாலம் கடந்த அக்டோபர் 26 அன்று பாஜக ஆட்சியில் மீண்டும் திறக் கப்பட்டது. ஆனால், நான்கே நாட்களில் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. பாலத்தில் குதித்து விளையா டியே விபத்திற்கு காரணம் என்று சிலர் தற்போது கதை யளந்துள்ளனர். உண்மையில் இந்த பாலத்திற்கு பிரிட்டிஷ் ஆட்சியில் வைக்கப்பட்ட பெயரே ‘குலுக்கும் பாலம்’ (ஜூல்டோ பூல்)தான்.
மக்களின் உயிரை காவு வாங்கிய மோர்பி நகராட்சியின் அலட்சியம்
மோர்பி தொங்குபால விபத் தில் 142 பேர் உயிர் பறி போனதற்கு, மோர்பி நகராட்சியின் அலட்சியமும், தரமற்ற வகையில் பாலப் பராமரிப்புப் பணியை மேற் கொண்ட தனியார் நிறுவனத்தின் லாப வெறியும்தான் காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அத்துடன், பால பராமரிப்பு பணியில் நடந்துள்ள விதிமீறல்களும் வெளிச் சத்திற்கு வந்துள்ளன. மோர்பி தொங்கு பாலம், மோர்பி நகராட்சிக்கு சொந்தமானது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகமா னது, கடந்த மார்ச் மாதம் மோர்பி பால புனரமைப்பையும், பராமரிப்பை யும் இ-பைக்குகளை தயாரிக்கும் ‘ஓரேவா குழுமம்’ (Oreva Group) என்ற நிறுவனத்திடம் 15 ஆண்டு களுக்கு காண்ட்ராக்ட் விட்டுள்ளது. அந்த ‘ஓரேவா’ குழுமமானது, மோர்பி தொங்குபால புனரமைப்புப் பணியை, அஜந்தா மேனுஃபேக்ச்ச ரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவ னத்திற்கு தந்துள்ளது. அதைத் தொடர்ந்து, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பழுது நீக்க மற்றும் புனர மைப்பு பணிகளுக்காக பாலம் மூடப் பட்டுள்ளது. இந்தப் பணிகள் முழு மையாகவே முடிந்ததோ.. இல் லையோ கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி தீபாவளியையொட்டியும், குஜ ராத்தி புத்தாண்டை முன்னிட்டும் மக்க ளின் பயன்பாட்டிற்கு திறந்து விடப் பட்டுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 30 ஞாயிறன்று விடுமுறை நாள் என்ப தாலும், சாத் பூஜைக்காகவும் 400-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் குவிந்துள்ளனர். இதில்தான் பாலம் அறுந்து மக்கள் ஆற்று நீரில் மூழ்கி கொத்துக் கொத்தாக செத்து மிதந் துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதங்களுக்கு உள் ளாகி இருக்கும் நிலையில்தான், பாலப் பராமரிப்பு பணியில், குஜ ராத் பாஜக அரசும், மோர்பி நகராட்சி நிர்வாகமும் காட்டிய அலட்சியம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாலப் பராமரிப்புப் பணியை காண்ட்ராக்ட் எடுத்த ‘ஓரேவா குழுமம்’, பணிகள் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட நக ராட்சியிடம் இருந்து பிட்னஸ் சான்றி தழ் (FC) பெறவில்லை என்று தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், ஓரேவா குழுமமானது, மோர்பி பாலத்தை நகராட்சிக்கு தெரி யாமலேயே மக்களின் பயன்பாட் டிற்கும் திறந்து விட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும் இதுதொடர்பாக கேள்வி எழுப்பவில்லை. சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் எந்த விசார ணையும் நடத்தவில்லை. பாலம் மக்க ளின் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கிறதா? என்ற ஆய்வையும் நடத்தவில்லை. மோர்பி நகராட்சி யின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலாதான் இவ்வளவு விவரங்களை யும் கூறியுள்ளார். அதாவது நகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனத் தின் அலட்சியமே தற்போது 142 உயிர் களை காவு வாங்கியிருக்கிறது. தற்போது விபத்துக்குப் பிறகு மோர்பி பாலத்தின் நிர்வாகக் குழு வுக்கு எதிராக இந்திய தண்டனை சட்டப் பிரிவு (IPC) 304, 308-இன் கீழ் 9 பேர் மீது குஜராத் போலீசார் வழக் குப் பதிவு செய்துள்ளதாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்துள்ளார். ஆனால், ஓரேவா குழுமத்தின் செய்தித் தொடர்பாளரோ, “பாலத் தின் நடுப்பகுதியில் ஒரே நேரத்தில் பலர் குவிந்துள்ளனர். இருபுறமும் மாறிச் செல்ல குவிந்தபோது பாலம் இடிந்து விழுந்தது” என்று சமாளித் துள்ளார்.
காந்தி நகர், அக்.31- குஜராத் மாநிலத்தில் மோர்பி தொங்குபாலம் அறுந்து விழுந்து ஏற் பட்ட விபத்தில், 47 குழந்தைகள் உட்பட 142 பேர் பலியான துயரம் நாடு முழு வதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத் தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்திற்கு, மோர்பி தொங்கு பால பராமரிப்புப் பணியை, குஜராத் பாஜக அரசு தனியார்வசம் ஒப்படைத் ததும், சம்பந்தப்பட்ட ‘ஒரேவா’ என்ற தனியார் நிறுவனம் தரமற்ற வகை யில் பராமரிப்புப் பணியை மேற்கொண் டதுமே காரணம் என்று குற்றச்சாட்டுக் கள் எழுந்துள்ளன. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சூ ஆற்றின் குறுக்கே கட்டப் பட்டிருந்த தொங்குபாலம் ஞாயிற்றுக் கிழமை மாலை 6.42 மணியளவில் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில், ரூ. 2 கோடியில் கடந்த 7 மாதமாக புனரமைப்புப் பணி கள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலை யில், அந்தப் பணிகள் முடிந்து, கடந்த தீபாவளியன்று மக்களின் பயன்பாட் டுக்குத் திறந்து வைக்கப்பட்டது. இந் நிலையில்தான் அந்தப் பாலம் ஞாயி றன்று எதிர்பாராத விதமாக அறுந்து விபத்திற்கு உள்ளாகியிருக்கிறது. மோர்பி தொங்குபாலம் சுற்றுலாத் தலம் என்பதால், இந்தப் பாலத்தைக் காண 400-க்கும் மேற்பட்டோர் திரண்டி ருந்தனர். பாலம் இரண்டாக அறுந்த தில், அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் மக்களால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியவில்லை. பலர் தண்ணீருக்குள் மூழ்கினர். கயிற்றைப் பிடித்து நீண்டநேரமாக தொங்கிக் கொண்டிருந்தவர்களும், ஒரு கட்டத் திற்குப் பிறகு கை வலி காரணமாக பிடியை தொடரமுடியாமல் ஆற்றுக் குள் விழுந்தனர்.
இந்த துயரச் சம்பவத்தில், ஆரம்பத்தில் 60 பேர் மட்டுமே பலியான தாக செய்திகள் வெளியாகின. ஆனால், ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் தீய ணைப்புப் படை வீரர்கள் மேற்கொண்ட மீட்புப் பணிகளின் முடிவில், திங்கட் கிழமை காலை 11 மணியளவில் பலி யானவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்தது. 177 பேர் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என்பதால் அவர் களைத் தேடும்பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது. மீட்புப் பணியில் ராஜ்கோட் தீய ணைப்பு படையின் 6 படகுகள், 6 ஆம்பு லன்ஸ்கள், 2 மீட்பு வேன்கள் மற்றும் 60 ராணுவ வீரர்கள் மற்றும் பரோடா, அகமதாபாத், கோண்டல், ஜாம்நகர், கட்ச் ஆகிய இடங்களில் இருந்து 20 மீட்புப் படகுகள், 12 தீயணைப்பு வாக னங்கள், மீட்பு வேன்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத் தப்பட்டு உள்ளன. மோர்பி தொங்குபால விபத்தில் இறந்தவர்களில், 5 குழந்தைகள் உட்பட 12 பேர், குஜராத் பாஜக எம்.பி. மோகன் பாய் கல்யாண்ஜியின் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை யும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, குஜ ராத் முதல்வர் பூபேந்திர படேல், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல் வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ள னர்.
“மோர்பி சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் பாதிக் கப்பட்டவர்களுக்காக பிரார்த்திக்கி றேன்” என்று குடியரசுத் தலைவர் திரௌதி முர்முவும், “மோர்பி சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட வும், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோர் தங்களின் இரங்கலில் குறிப்பிட்டுள்ளனர். “என் வாழ்நாளில் இத்தகைய ஒரு துயரத்தை தான் எப்போதும் கடந்ததில்லை” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். “ஒருபுறம் என் இதயம் வலியில் கனக்கி றது. இன்னொரு புறம் கடமையின் பாதை என்னை அழைக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு கவலை தெரி வித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட டுவிட்டர் பதி வில், குஜராத் உள்துறை இணையமைச் சர் ஹர்ஷ் சிங்வி-யுடன் பேசியதாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப் பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கேற்ப விபத்து நடந்த இடத் திற்கு மாநில அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ராவை அனுப்பிவைத்த குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு தலா ரூ. 4 லட்சம், காயமடைந்த வர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்தும் உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காய மடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக தற்போது குஜராத் மாநிலத்தில்தான் முகாமிட்டுள்ளார் என்ற நிலையில், அவர் விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிடு வார் என்றும் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
மோர்பி தொங்குபாலம் 100 பேரை மட்டுமே தாங்கக் கூடியது; ஆனால், ஞாயிறன்று சாத் பூஜை காரணமாக 400-க்கும் அதிகமானோர் பாலத்தில் திரண்டதுடன், இளைஞர்கள் சிலர் பாலத்தில் குதித்துக் குதித்து விளை யாடியதே விபத்துக்கு காரணம் என்று கூறப்படும் நிலையில், உண்மையில் பாலம் அறுந்து விழுந்ததற்கு, தனி யார் நிறுவனத்தின் தரமற்ற பராமரிப்புப் பணியே காரணம் என்றும், இதில், குஜ ராத் பாஜக அரசு ஊழல் செய்திருப்ப தாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. “நாங்கள் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யவில்லை. இது குறித்து யார் மீதும் குற்றம் சுமத்த வில்லை. ஆனால், புனரமைப்பு பணி கள் முடிந்து மீண்டும் திறக்கப்பட்ட 5, 6 நாட்களுக்குள் தொங்கு பாலம் எவ் வாறு சீர்குலைந்தது என்பது குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமை யில் விசாரணை நடத்த வேண்டும்” என்று காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கோரிக்கை விடுத் தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு கொல் கத்தாவில் சாலை மேம்பாலம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்ததற்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு குறித்து பிரதமர் மோடி குறை கூறியிருந்தார். இதனை மேற்கோள் காட்டி டுவீட் செய்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங், “தற்போது நடந்திருக்கும் மோர்பி பால விபத்து கடவுளின் செயலா அல்லது மோசடி செயலா? என பிர தமர் விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். மேலும் “6 மாதங் களாக பாலம் பழுதுபார்க்கப்பட்டது. ஆனால் திறக்கப்பட்ட ஐந்து நாட்க ளுக்குப் பிறகு இடிந்து விழுந்துள்ளது. 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத்தில், இந்த ஆண்டு ஜூலை மாதம் கட்ச் மாவட்டத்தில் உள்ள பித்ரா கிராமத்தில் முதல் நாள் சோத னையின் போது நர்மதா கால்வாய் உடைந்தது. அதேநேரத்தில் புஜில் ஒரு மேம்பாலம் கட்ட 8-9 ஆண்டுகள் ஆனது” என்பதையும் திக்விஜய் சிங் நினைவுபடுத்தினார். குஜராத் அமைச்சர் பிரஜேஷ் மிஸ்ராவும், இந்த குற்றச்சாட்டுக்களை சாமர்த்தியமாக கையாளுவதாக கருதி, “இந்த கோர விபத்துக்கு குஜ ராத் அரசு முழு பொறுப்பேற்கிறது” என்று விவாதங்களை நீளவிடக் கூடாது என்ற வகையில் தானாகவே முன்வந்து வாக்குமூலம் அளித்துள்ளார்.