கர்நாடக மாநிலம் மங்களூரு நர்சிங் கல்லூரி மாணவர்கள் 137 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூரு சக்திநகர் பகுதியில் சிட்டி நர்சிங் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் விடுதியில் நேற்று இரவு உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 137 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அம்மாவட்ட சுகாதார ஆய்வாளர் டாக்டர் அசோக் தெரிவித்தார்.