states

img

கர்நாடக தேர்தல்: ஹிஜாப் தடை விதித்த அமைச்சர் பி.சி.நாகேஷ் படுதோல்வி

கர்நாடகாவில் ஹிஜாப் தடை விதித்த அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், திப்தூர் சட்டப்பேரவை தொகுதியில் படுதோல்வி அடைந்தார்.
கர்நாடகாவின் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 73.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் படுதோல்வி அடைந்தார். இவர் கர்நாடகாவின் கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடையை கொண்டு வந்தார். இதனால் அம்மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதன் எதிரொலியாக சட்டப்பேரவை தேர்தலில் பி.சி.நாகேஷ் படுதோல்வியை சந்தித்தார்.
இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.ஷடாக்ஷரி 17,652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.