கர்நாடக மாநிலத்தில் தண்ணீர் தொட்டியை மாட்டின் மூத்திரத்தை கொண்டு கழுவிய அவலம் நடந்துள்ளது.
கர்நாடகாவில் சம்மராஜநகர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் பொது தண்ணீர் தொட்டியிலிருந்து நீர் அருந்தியுள்ளார். இதனை கண்ட ஆதிக்க சாதியினர், தொட்டியிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றிவிட்டு, தொட்டியை சுத்தம் செய்வதாக கூறி அதில் மாட்டின் மூத்திரம் தெளித்து சுத்தம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.