கர்நாடக முதல்வர் சித்தராமையா வின் மனைவி பார்வதிக்கு சொந்த மான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப் படுத்தியது. இதையடுத்து பார்வதி யின் கோரிக்கைப்படி, கடந்த ஆண்டு மைசூருவில் உள்ள விஜய நகரில் அவ ருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பை விட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பலமடங்கு அதிகமாக இருந்ததாகக் கூறி, பாஜக - மதஜ கட்சி யின் தூண்டுதலால் சமூக ஆர்வலர்கள் டி.ஜே.ஆபிரகாம், பிரதீப் குமார், சிநேக மாயி கிருஷ்ணா ஆகியோர் சித்தராமை யாவுக்கு எதிராக மைசூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த னர். இது வெறும் புகாராக இருந்தாலும், பாஜக - மதஜ கூட்டணி கட்சிகளின் கோ ரிக்கையாலும், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் நோக்கத்திலும் முதல்வர் சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி னார். ஆளுநரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் சித்த ராமையா,“எனக்கு எதிரான புகாரை முறையாக விசாரிக்காமல், என் மீது வழக்கு தொடர அவசர கதியில் ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். இந்த அதி காரம் ஆளுநருக்கு இல்லை. இந்த முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது” எனக் கூறி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று விசார ணைக்கு வந்த நிலையில், நில முறை கேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தரா மையாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.