கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள தொட்டபல்லா புரா நகரில் இந்துத்துவா ஆத ரவு அமைப்பான ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்தவர்கள் மாட்டிறைச்சி கொண்டு செல்வதாக கூறி, இந்துபுராவில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த வாகனங் களை சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்து சோதனை செய்துள்ளனர். சோத னைக்கு ஒத்துழைக்காத 7 வாகனங் களை சிறைபிடித்த நிலையில், வாகன ஓட்டி ஒருவர்,”எதற்கு சோதனை செய்கி றீர்கள்” எனக் கேள்வி எழுப்பி, வழி விட சொன்னார். உடனே ஸ்ரீராம் சேனா குண் டர்கள் கேள்வி கேட்டவரின் கார் ஒன் றிற்கு தீ வைத்துள்ளனர். பின்னர், அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தொட்டபல்லாபுரா போலீசார் விசாரணை நடத்தி, ஸ்ரீராம் சேனாவைச் சேர்ந்த குண்டர்களை தேடி வருகின்றனர்.