பெங்களூருவில் பைஜூஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளனர்.
பைஜூஸ் நிறுவனம் கடந்த 2011 முதல் 2023 ஆண்டு வரை ரூ.28,000 கோடி அந்நிய முதலீடுகளை பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா) விதிகளின் கீழ் பெங்களூருவில் உள்ள ரவீந்திரனின் 2 வீடுகளில் மற்றும் அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளனர்.