அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என பாஜக எம்பி அனந்த்குமார் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தின் சித்தாபூரில் நடந்த கூட்டத்தில் வரும் மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முழக்கமான ”அப்ரி பார் 400 பர்” முழக்கத்தை பாஜக எம்பி அனந்த்குமார் விளக்கி பேசுகையில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிராக உள்ளது.மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் .400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி கூறியது இதற்காகத்தான் என குறிப்பிட்டு அனந்த்குமார் ஹெக்டே பேசிய இப்பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.