states

img

கர்நாடகாவில் வார இறுதி ஊரடங்கு ரத்து  

கர்நாடக மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அம்மாநில அரசு ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் கொரோனா மூன்றாம் அலை தொற்று அதிகரித்து வரும் நிலையில் கர்நாடக அரசு வார இறுதி ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. பெங்களூருவை தவிர பிற மாவட்டங்களில் பள்ளிகளை திறக்கலாம். பள்ளிகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 பேரை தாண்டினால் அந்த பள்ளிகள் மூடப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

அதனைதொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்தால் வார இறுதி ஊரடங்கு உத்தரவு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் 31 ஆம் தேதிவரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

;