states

img

சித்தராமையாவுக்கு நிதி, சிவகுமாருக்கு நீர்வளம், பரமேஸ்வராவுக்கு உள்துறை

பெங்களூரு, மே 29 - கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லில், பாஜக-வை வீழ்த்தி காங்கிரஸ்  ஆட்சிக்கு வந்தது. சித்தராமையா தலைமையில் 34 பேர் கொண்ட புதிய அமைச்சரவை அண்மையில் பதவியேற்றுக் கொண்டது. எனி னும், அவர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.  இந்நிலையில், முதல்வர் சித்த ராமையா, துணை முதல்வர் டி.கே.  சிவகுமார் உள்ளிட்ட 34 அமைச்சர் களுக்குமான துறைகள் அதிகாரப் பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளன. இதன்படி நிதி, தொழிலாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தம், உள வுத்துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பம் (IT-BT), உள்கட்டமைப்பு மேம்பாடு, தகவல் தொடர்பு ஆகிய துறை களை முதல்வர் சித்தராமையா தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளார்.  துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு பிற முக்கியத் துறைகளான பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனம், ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே-வை (பிபிஎம்பி) உள்ளடக்கிய பெங்களூரு நகர மேம்பாடு, பெங்களூரு நகர பிற  குடிமை அமைப்புகள் போன்ற  துறைகள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இந்த இரண்டு துறைகளும் மாநில பட்ஜெட்டில் மிக அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளாகும். மூத்த அமைச்சர் ஜி. பரமேஸ் வராவுக்கு உளவுத்துறை தவிர்த்த உள்துறையும், எச்.கே. பாட்டீலுக்கு சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரம், சட்டப்பேரவை மற்றும் சுற்றுலாத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏழு முறை எம்.பி.யாக இருந்த வரும் தற்போது அமைச்சராகி இருப்பவருமான எச்.கே. முனி யப்பாவுக்கு உணவு மற்றும் சிவில் சப்ளை, நுகர்வோர் விவகாரத் துறை ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த அமைச்ச ரான கே.ஜி. ஜார்ஜுக்கு எரிசக்தித் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. எட்டுமுறை எம்எல்ஏ-வாகி, தற்போது அமைச்சராக்கப்பட்டி ருக்கும் ராமலிங்கரெட்டிக்கு போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எம்.பி. பாட்டீலுக்கு பெரிய மற்றும் சிறு தொழில்துறையும், சதீஸ் ஜர்கிகோலிக்கு பொதுப் பணித்துறையும், என். செலுவரயா சுவாமிக்கு விவசாயத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல் முறையாக அமைச்சராகி யிருக்கும் மதுபங்காரப்பாவுக்கு ஆரம்ப மற்றும் இடைநிலை கல்வித்துறையும், எம்.சி. சுதா ருக்கு உயர்கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரே பெண் அமைச்சரான லட்சுமி ஹெப்பால்கருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் அதிகாரம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மூத்த அமைச்சர் எச்.சி  மகாதேவப்பாவுக்கு முக்கியத் துறையான சமூகநலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தினேஷ் குண்டுராவுக்கு சுகா தாரம் மற்றும் குடும்பநலத்துறை யும், பிரியங்க் கார்கேவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. கிருஷ்ணா பைரகவுடாவுக்கு வருவாய்த்துறை யும், பி.இசட் சமீர் அகமதுவுக்கு வீட்டுவசதி, வக்ப் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறையும் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசின் புதிய அமைச்சர வையில், லிங்காயத் சமூகத்தின ருக்கு – 8 (ஒரு பெண் உட்பட); ஒக்கலிகா சமூகத்திற்கு – 5; பட்டியல் வகுப்பினருக்கு – 7; பழங்குடியின ருக்கு – 3; இதர பிற்படுத்தப்பட்ட  வகுப்பினருக்கு – 6; முஸ்லிம் களுக்கு – 2; பிராமணருக்கு – 1, ஜெயினுக்கு – 1; கிறிஸ்தவருக்கு – 1 என பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு உள்ளது.